10 ஆண்டுகளில் 25 முறை தப்பி ஓடிய மனைவி.. அவளை உண்மையாக நேசிக்கிறேன் கணவன்!

Published by
பாலா கலியமூர்த்தி

அசாம் மாநிலத்தில் திருமணமாகி 10 ஆண்டுகளில் கணவரை விட்டு 25 முறை மற்றொருவருடன் தப்பி ஓடிய மனைவி.

மத்திய அசாமின் நாகான் மாவட்டத்தில் உள்ள திங் லாகர் கிராமத்தில் 40 வயதான பெண், 10 வருடங்களில் 25 முறை தப்பி ஓடி வெவ்வேறு ஆண்களுடன் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண்ணின் கணவர் மாஃபிசுதீன் கூறுகையில், 2011 ல் நாங்கள் திருமணம் செய்த பிறகு பத்து வருடங்களில் என் மனைவி சுமார் 25 முறை மற்றவர்களுடன் தப்பி ஓடிவிட்டாள்.

ஒவ்வொரு முறையும், குடும்பத்திற்கு திரும்பிய பிறகு, அவள் அதை மீண்டும் செய்ய மாட்டேன் என்று உறுதியளித்தாள். ஆனால் இதுவரை அவள் தன் உறுதிப்பாட்டை கடைபிடிக்க தவறிவிட்டாள். சில சமயங்களில் என் மனைவி தன் உறவினர்களின் வீடுகளுக்குச் சென்றதாகக் கூறினாள். சில சமயங்களில் அவள் நோய்வாய்ப்பட்ட உறவினர்களைப் பார்க்கச் சென்றதாகக் கூறினாள்.

எங்களுக்கு மூன்று குழந்தைகள் என்றும் குழந்தைகளின் பராமரிப்பைக் கருத்தில் கொண்டு நாங்கள் அவளை ஒவ்வொரு முறையும் ஏற்றுக்கொண்டோம் எனவும் கணவர் மாஃபிசுதீன் தெரிவித்தார். செப்டம்பர் 4 சனிக்கிழமை அன்று நான் வேலை முடிந்து வீடு திரும்பியபோது, என் 3 மாத மகனை பக்கத்து வீட்டில் விட்டுவிட்டு, தனது மனைவி ஓடிவிட்டாள் என்று என் தந்தையிடமிருந்து அறிந்தேன்.

பக்கத்து வீட்டில் உள்ள ஒரு பெண்ணிடம், தனது மனைவி ஆடுகளுக்குத் தீவனம் சேகரிக்கப் போவதாகச் சொல்லிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அவள் எப்போது திரும்பி வருவாள் என்று தெரியவில்லை. கிளம்புவதற்கு முன், வீட்டில் இருந்து ரூ. 22,000 மற்றும் இதர பொருட்களை மனைவி எடுத்துச் சென்றதாக கணவர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், நான் எனது மனைவியை உண்மையாக நேசிப்பதால் அவளை ஏற்றுக்கொள்வேன். எங்களுக்கு மூன்று சிறிய குழந்தைகளும் உள்ளன. நான் என் மனைவியை ஏற்கவில்லை என்றால் அவர்களை யார் கவனிப்பார்கள்? சட்ட மற்றும் பிற பிரச்சனைகளை தவிர்க்க நான் போலீசில் எந்த புகாரும் அளிக்கவில்லை என மனவேதனையுடன், உண்மையான காதல் வலியுடன் தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

11 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

12 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

12 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

13 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

13 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

14 hours ago