கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கேரள அரசு முழு முடக்கத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு முதலில் வந்த கேரளா தான்.முதலில் கொரோனா கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் கடந்த சில தினங்களாக அங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது.நேற்று ஒரே நாளில் 1078 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,111 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர் . இதனால் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 9468-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 6,164 பேர் குணமடைந்து உள்ளனர்.
ஒரு நாளைக்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் கேரள அரசு முழு முடக்கத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வருகின்ற திங்கள் கிழமை சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.இந்த கூட்டத்தில் முழு முடக்கம் அமல்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான இறுதி முடிவு அன்றைய தினம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கனவே அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனும் முழு முடக்கம் அறிவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டம் நடத்தி வரும் அன்புமணி ராமதாஸ், சமீபத்தில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினைகள்…
பெங்களூர் : கர்நாடகாவில் தடைசெய்யப்பட்ட நடிகர் கமல்ஹாசனின் 'தக் லைஃப்' திரைப்படத்தை வெளியிடுவது குறித்து உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று…
லீட்ஸில் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின் முதல்…
சென்னை : பெரம்பூரில் ஜூன் 18, 2025 அன்று காலை 7:30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில், கொளத்தூர் பொன்னியம்மன்…
வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…