கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கேரள அரசு முழு முடக்கத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு முதலில் வந்த கேரளா தான்.முதலில் கொரோனா கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் கடந்த சில தினங்களாக அங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது.நேற்று ஒரே நாளில் 1078 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,111 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர் . இதனால் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 9468-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 6,164 பேர் குணமடைந்து உள்ளனர்.
ஒரு நாளைக்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் கேரள அரசு முழு முடக்கத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வருகின்ற திங்கள் கிழமை சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.இந்த கூட்டத்தில் முழு முடக்கம் அமல்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான இறுதி முடிவு அன்றைய தினம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கனவே அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனும் முழு முடக்கம் அறிவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…