சுயமரியாதை இருந்தால் கவர்னர் பதவியில் தொடருவாரா? என்பது குறித்து கவர்னரே யோசிப்பார் என சரத்பவார் காட்டமாக தெரிவித்துள்ளார்.
மகராஷ்டிரா மாநிலத்தில் வழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பாக ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அண்மையில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
அக்கடிதத்தில் ஆளுநர் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயை திடீரென மதச்சார்பின்மைக்கு மாறிவிட்டீர்களா? என்று கேட்டு கடிதம் எழுதியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இக்கடிதத்திற்கு முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயும் பதிலடி கொடுக்கும் வகையில் அரசியல் சாசனத்தின் கீழ் செயல்படும் கவர்னர் என்று விமர்சித்தார்.இதனால் ஆளுநர் -முதலமைச்சர் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில் உஸ்மனாபாத் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கவர்னர், முதலமைச்சர்க்கு ஆளுநர் எழுதிய சர்ச்சைக்குரிய கடிதம் குறித்து கூறியதாவது:
முதலமைச்சர்க்கு கவர்னர் எழுதிய கடிதத்தில் உள்ள வார்த்தைகள் குறித்து உள்துறை மந்திரி அமித்ஷா அதிருப்தி தெரிவித்து உள்ளார். சுயமரியாதை உள்ள எவரும் இனிமேல் அப்பதவியில் தொடரலாமா? அல்லது வேண்டாமா ?எண்று ஆளுநரே யோசிப்பார் என குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…