மருத்துவ பரிசோதனைகளுக்கு தற்போது இருக்கும் ரூ. 5,000 வரையிலான வரி விலக்கை விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ரூ.20,000 ஆக அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைதுள்ளனர். மருத்துவ செலவுக்கான வரி விலக்கு பற்றிய அறிவிப்பு நடப்பு பட்ஜெட் தாக்கலின் போது வெளியாகும் என்று தெரிகிறது.
இந்தியாவில் வருமான வரிச்சட்டம் நடைமுறை வந்ததில் இருந்து கிடைக்கும் வரி தொகையில் 75 சதவிகிதம் தனிநபர் மற்றும் மாத சம்பளம் பெறுபவர்களிடம் இருந்து தான் கிடைக்கிறது. ஆனால், அதற்கான வருமான வரிச் சலுகையானது இவர்களுக்கு கிடைப்பதில்லை. மாறாக பெரும் நிறுவனங்களுக்கு மட்டுமே வருமான வரிச்சலுகை பெருமளவு கிடைக்கிறது என்ற குற்றச்சாட்டை பலர் முன் வைத்தனர். அவர்களுக்காகவே கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இடைக்கால பட்ஜெட் அறிவிப்பில், தனிநபர் வருமான வரி விலக்கு ரூ.2.5 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டது.
மேலும், வருமான வரிச்சட்டம் 80 D யின் படி ,தற்போது மருத்துவ பரிசோதனைக்காக அளிக்கப்பட்டு வரும் வரி விலக்கை ரூ.5,000 இருந்து ரூ,20,000 ஆக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்த கோரிக்கையானது தேசிய அளவில் முக்கியமானதாக தெரிகிறது.ஆனால் அண்மையில் நடந்த நிதித்துறை அதிகாரிகள் கூட்டத்தில் மருத்துவ பரிசோதனைக்கான வரி விலக்கை ஆண்டொன்றுக்கு ரூ,10,000 மட்டுமே உயர்த்த முடியும் என்று நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…
மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…
நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…