ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் 18 எம்.எல்.ஏ க்களுடன் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி டெல்லியில் முகாமிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியை சார்ந்த 6 எம்.எல்.ஏ-க்களை காங்கிரஸ் கட்சியுடன் அசோக் கெலொட் இணைத்திருந்தார். இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.
அந்த மனுவில், எம்.எல்.ஏக்கள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இந்த மனு மீதான விசாரணை கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் எம்.எல்.ஏ இணைப்புக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.
ஆனால், நீதிபதி பகுஜன் சமாஜ் கட்சி கோரிக்கையை நிராகரித்து, வழக்கை இன்று ஒத்திவைத்தனர். இந்நிலையில், அந்த மனு மீதான தீர்ப்பு வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சச்சின் பைலட் மற்றும் 18 பேர் டெல்லியில் முகாமிட்டுள்ளதால் காங்கிரசுக்கு 102 இடங்கள் மட்டுமே உள்ளது.
இந்த 6 எம்.எல்.ஏக்கள் இணைபுக்கு தடைவிதிக்கப்பட்டால் காங்கிரஸ் பலம் 96 ஆககுறைந்துவிடும். வருகின்ற 14-ம் தேதி சட்டசபையில் காங்கிரஸ் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…