ஊரடங்கு காலத்திலும் பாலியல் தொழிலாளர்கள் மற்றும் போலிஸாருக்கு இலவச உணவு வழங்கும் பெண்…!

Published by
லீனா

ஊரடங்கு காலத்திலும் பாலியல் தொழிலாளர்கள் மற்றும் போலிஸாருக்கு இலவச உணவு வழங்கும் பெண். 

இந்தியா முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து பலரும் உணவிற்கே வழியின்றி தவித்து வருகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு பலர் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.

அந்த வகையில், புனேவில் அகன்ஷா சடேகர் என்ற பெண் தினசரி 7,000 பேருக்கு உணவுகளை இலவசமாய் வழங்கி வருகிறார். காஷிபாய் நவலே மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ பயிற்சியாளராக அவரது சகோதரர் சோஹம் பணியாற்றி வருகிறார். இவர் மீது கொண்ட அன்பின் காரணமாக தான்  இந்த பணியை செய்வதாக தெரிவித்துள்ளார்.

சில சமயங்களில் அவரது சகோதரர் உணவை உட்கொள்வதற்கு பல சிரமங்களை எதிர் கொள்கிறார். இதனை பார்த்த இவர் 2020 நவம்பரிலிருந்து தினசரி டிபன் வழங்க முடிவு செய்தார். இவர் இலவசமாக உணவு வழங்குவது பிரபலமாக தெரியவந்த நிலையில், தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு டிபன்களை வழங்கி வந்தார்.

COVID-19 ஐ கட்டுப்படுத்த அரசாங்கம் ஊரடங்கை அமல்படுத்திய போது, ட்வீட்டர் பக்கத்தில் ஒருவர் 12 மணி நேரமாக காத்திருந்து உணவு கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளார். கட்டுப்பாடுகள் காரணமாக அவரால் ஆன்லைன் மூலமாகவும்  உணவை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்ற பதிவினை பார்த்தார். இதனை பார்த்த அவர் அந்த நபருக்கு உதவி செய்துள்ளார்.

இவரது இந்த செயல் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலான நிலையில், பலரும் அகன்ஷா சடேகரிடம் தங்களது உணவு தேவையை குறித்து தெரிவித்தனர். இந்த கோரிக்கைகளை பூர்த்தி செய்ய அகன்ஷாவின் வீட்டு சமையலறை மிகவும் சிறியதாக இருந்தது. எனவே கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட உணவகங்களை சிலவற்றை அணுகி அந்த உணவகங்கள் மூலமாக உணவுகளை தயார் செய்து வழங்கத் தொடங்கினார்.  உணவை வழங்கும் போது போலீசார் அவரை தடுத்து நிறுத்துவதுண்டு.

அவர்களிடம் தனது பணியை குறித்து கூறிவிட்டு, போலீசார் மூலமாகவே தெருவில் வசிப்போருக்கு உணவுகளை வழங்கி வந்தார். மேலும் தெருவில் வசிப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் தங்களது பணி நேரத்தில் உணவு உட்கொள்ள முடியாத நிலையில் காணப்படும் காவல்துறையினருக்கும் உணவு பொட்டலங்களை வழங்க வழங்கியுள்ளார். பின் அருகில் உள்ள பகுதியில் வசிக்கும் பாலியல் தொழிலாளர்களுக்கும் கிட்டத்தட்ட 2500 பேருக்கு உணவு  வழங்குகின்றார்.

அகன்ஷா, தனது நண்பர்களான குஜராத்தைச் சேர்ந்த மாத்தூர் சர்மாவுடன் சமீபத்தில் புருஷோத்தம் மாலதி அறக்கட்டளையை அமைத்து, தொடர்ந்து அதிகரித்து வரும் உணவைப் பூர்த்தி செய்ய நன்கொடை திரட்டி வருகிறார். அதன்படி, ரூ.15 லட்சம் திரட்ட அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதனால் அவர்கள் தொடர்ந்து இலவசமாக உணவை வழங்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

Published by
லீனா
Tags: akanshaFood

Recent Posts

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…

17 minutes ago

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

58 minutes ago

வெளுத்து வாங்கும் கனமழை.., வால்பாறை பள்ளிகளுக்கு விடுமுறை.!

கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…

1 hour ago

இன்று மாலை ISS-க்குள் நுழைகிறது ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம்.! அப்போது என்ன நடக்கும்?

அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…

1 hour ago

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட  இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…

12 hours ago

எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…

12 hours ago