மோசடி செய்த பணத்தை பிரிப்பதில் கள்ளகாதலர்களுக்கு வந்த தகராறில் பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மும்பையில் உள்ள காஷ்மீரா என்னும் பகுதியில் வசித்து வரக்கூடிய ஆஷீஷ் என்பவர் திருமணமாகி மனைவியுடன் வாழ்ந்து வந்துள்ளார். சூரத்தை சேர்ந்த நிகிதா என்பவரும் ஏற்கனவே திருமணம் ஆனவர், ஆனால் இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் ஆஷிஷுக்கும் நிகிதாவுக்கும் பேஸ்புக் மூலமாக பழக்கமாக ஏற்பட்டு நாளடைவில் இருவருக்கும் அது காதலாக மலர்ந்துள்ளது. இதனால் ஆஷீஷ் தன்னுடைய மனைவியை விட்டு விட்டு பிரிந்து வந்து நிகிதா உடன் வாழ்ந்துள்ளார். இருவருக்கும் கள்ள உறவு ஏற்பட்டுள்ளது. இருவரும் சேர்ந்து கார்டு ஸ்வைப் மெஷின் பிசினஸ் ஒன்றை ஆரம்பித்து, தங்களின் கார்டுகளை ஸ்வைப் செய்து 15 லட்சத்திற்கும் மேல் பணம் எடுத்துள்ளதாக இவர்கள் மீது மோசடி புகார் எழுந்துள்ளது.
இதனையடுத்து ஸ்வைப் மெஷின் கம்பெனியினர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் அவர்களை தேடி வருவதை அறிந்து இருவருமே தலைமறைவாகி உள்ளனர். அதன் பிறகு இவர்கள் இருவரும் மோசடி செய்த பணத்தை பிரித்துக் கொள்வதில் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இந்த சண்டை ஒரு கட்டத்தில் ஆஷீஷ்க்கு கோபத்தை அதிகரிக்க செய்யவே, நிகிதாவை அவர் அடித்துக் கொலை செய்து விட்டு, அவரே சடலத்தை புதைத்து விட்டு தன்னுடைய சொந்த ஊருக்கு சென்று உள்ளார். அதன்பின் நிகிதாவின் உறவினர்கள் அவரை காணவில்லை என்று தேடிக் கொடுத்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தியதில் நிகிதாவை ஆஷீஷ் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் தற்பொழுது அவரை தேடிவருகின்றனர்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…