மகாராஷ்டிரா புனேவில் அமைக்கப்படவுள்ள உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு பல்கலைக்கழகம்!

Published by
Rebekal

மகாராஷ்டிராவிலுள்ள மிகப்பெரிய நகரமாகிய புனேவில் 2021 ஆம் ஆண்டு உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு பல்கலைக்கழகம் அமைக்கப்படவுள்ளது.

மகாராஷ்டிராவின் மிகப்பெரிய முக்கிய நகரமாகிய புனேவில் சர்வதேச விளையாட்டு பல்கலைக்கழகம் அமைக்கப்பட உள்ளது. அடுத்த கல்வி ஆண்டாகிய 2021 – 2022 முதல் இந்த விளையாட்டு பல்கலைக்கழகம் செயல்படும் என மகாராஷ்டிர விளையாட்டு துறை அமைச்சர் சுனில் கேதார் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து பேசிய அவர், தேசிய அளவிலான விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கும் பயிற்சி மற்றும் மேம்பாடு தவிர பல்வேறு விளையாட்டு மற்றும் விளையாட்டுகளில் உள்ள நுட்பங்களை ஒன்றிணைக்கும் தளமாக இந்த பல்கலைக்கழகம் இருக்குமெனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஆரம்ப நிதி உதவியுடன் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மேம்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுகள் தவிர உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு பயிற்சிகளையும் இந்த வளாகத்தில் மேற்கொள்ளக் கூடிய அளவு உட்கட்டமைப்பு இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச தரங்களுடன் அமைக்கக்கூடிய விளையாட்டு பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு தரமான பயிற்சி மற்றும் உள்ளீடுகளை கொடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார். அதிகப்படியான விளையாட்டு பாரம்பரியத்தை கொண்டுள்ள நமது மாநிலத்தில் பல்வேறு தகுதியான மற்றும் சிறப்பான விளையாட்டுவீர்கள் உருவாக்கியிருக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ள அவர், விளையாட்டு வீரர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது நமது கடமை எனவும் கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

IND vs ENG: 2-வது போட்டியில் ஷர்துல் வேணாம்…”அவரை தூக்குங்க”அட்வைஸ் கொடுத்த சஞ்சய் மஞ்ச்ரேகர்!

IND vs ENG: 2-வது போட்டியில் ஷர்துல் வேணாம்…”அவரை தூக்குங்க”அட்வைஸ் கொடுத்த சஞ்சய் மஞ்ச்ரேகர்!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

4 hours ago

அண்ணா பெயரை உச்சரிக்க திமுகவுக்கு அருகதை இருக்கிறதா? – இபிஎஸ் கேள்வி

சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…

5 hours ago

கருப்புபெட்டி தரவுகள் மீட்பு! விரைவில் விமான விபத்துக்கான காரணம்!

அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…

6 hours ago

விஜய் இதுவரை ஒரு கண்டனம் கூட தெரிவிக்காதது ஏன்? திருமாவளவன் கேள்வி!

சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…

6 hours ago

தோல்வியை தொடர்ந்து இந்தியாவுக்கு அடுத்த ஷாக்? பும்ராவுக்கு ஓய்வு அளிக்க முடிவு?

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…

6 hours ago

அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம் – ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி பேச்சு!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…

7 hours ago