மக்கள் தொகை பெருக்கம் ஒரு நாட்டின் வளர்ச்சியில் பாதிப்புகளை ஏற்படுத்துமா?!

Published by
மணிகண்டன்

ஒரு நாட்டின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவது அந்நாட்டின் நிதி நிலைமை மட்டுமல்ல, அந்நாட்டின் மக்கள் தொகையும் முக்கிய பங்கு வகிக்கும். அதாவது ஒரு நாட்டின் மக்களுக்கு உணவு, தங்குமிடம், உடை, சுகாதாரம் என அனைத்தும் சரிவர கிடைத்திருக்க வேண்டும். அதனை சரி செய்வதே மக்கள் தொகை பெருக்கம் உள்ள நாடுகளுக்கு பெரும் சவாலாக அமைந்து விடுகிறது.

உலக ஏழைகள் விகிதத்தில் 24 சதவீத ஏழைகள் இந்தியாவில் தான். இருக்கிறார்கள். என்பது வருந்தத்தக்க செய்தியாக இருக்கும் அதே வேளையில், உள்நாட்டு உற்பத்தி அதிகம் உள்ள நாடுகளில் உலகளவில் 5ஆம் இடத்தில இந்தியா உள்ளது. இந்தியாவில் இருக்கும் 1 சதவீத பணக்காரர்களிடமே இந்திய செல்வத்தில் 58 சதவீதம் இருக்கிறது. இந்த சதவீத மாறுபாடு இந்தியாவில் தீவிர ஏற்ற தாழ்வு இருப்பதை பகிரங்கமாக சுட்டி காட்டுகிறது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

தற்போது 133 கோடி உள்ள நமது நாட்டு மக்கள் தொகை 2050 இல் 27.3 கோடி அதிகரித்து விடும் என்ற அதிர்ச்சி தகவலும், 2027இல் மக்கள் தொகையில் முதலிடம் பிடித்த சீனாவை முந்திவிடும் என ஓர் முன்னனி ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த மக்கள் தொகையை கட்டுப்படுத்தவும், மக்கள் தொகையை எதிர்த்தும் மக்கள் தொகை பெருக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சீனா, இந்தியா, நைஜிரியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் தங்கள் நாடுகளில் குடும்ப கட்டுப்பாடு குறித்து பல விழிப்புணர்வு பற்றிய கருத்துக்களை மக்களிடம் பலவாறு புகுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் இரு வழிகளில் குடும்பக்கட்டுப்பாடு செய்யப்படுகிறது. இதில் தற்காலிகம் மற்றும் நிரந்தர குடும்ப கட்டுப்பாடு என இரு வழிகளில் செய்யப்படுகிறது. இந்த குடும்ப கட்டுப்பாடு விழிப்புணர்வு இந்தியாவில் பீகார், உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இன்னும் சரிவர குடும்ப கட்டுப்பாடு மக்களிடம் போய் சேரவில்லை என கூறப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…

6 hours ago

மஸ்கின் கட்சியில் இந்த மூன்று அமெரிக்கர்கள் இணைவார்கள்! ட்ரம்ப் ஆதரவாளர் லாரா லூமர் கணிப்பு!

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…

6 hours ago

மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…

7 hours ago

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…

8 hours ago

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…

10 hours ago

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

11 hours ago