பாஜக சார்பில் போட்டியிடும், முன்னாள் கிரிக்கெட் வீரர் அசோக் டிண்டாவுக்கு ‘Y+’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வேகப்பந்து வீச்சாளர் அசோக் திண்டா, சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். இதைத்தொடர்ந்து, வருகின்ற மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் மோய்னாப் தொகுதியில் பாஜக சார்பில் அசோக் திண்டா போட்டியிடுகிறார்.
இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தில் நேற்று ஈடுபட்டபோது அடையாளம் தெரியாத நபர்களால் அசோக் திண்டா தாக்கப்பட்டார். அவரது கார் குச்சிகள் மற்றும் கற்களால் தாக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் டிண்டாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரது கார் சேதமடைந்துள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக டிண்டா ஒரு வீடியோ மற்றும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
தனது காரும், தானும் செங்கற்களால் தாக்கப்பட்டதாக இந்த தாக்குதலை திரிணாமுல் காங்கிரஸ் நடத்தியதாக குற்றம் சாட்டினார். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை திரிணாமுல் காங்கிரஸ் மறுத்தது. இந்நிலையில், அசோக் டிண்டாவுக்கு ‘Y+’ பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…