இன்று முதல் ஜன்தன் கணக்குகளில் ரூ.500 பெற்று கொள்ளலாம் – மத்திய அரசு.!

Published by
Dinasuvadu desk

பெண்களின் ஜன்தன் கணக்குகளில் 2-வது தவணையாக மே மாதத்துக்கான தொகை ரூ.500 இன்று முதல் 5 நாட்களில் செலுத்தப்படுகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் வரவில்லை என மத்திய அரசு மே 17-ம் தேதி வரை மீண்டும் ஊரடங்கு நீடித்து உள்ளது.

 இந்த ஊரடங்கு காலத்தில் வேலையின்றி தவிக்கும் ஏழைகளுக்கு உதவும் வகையில் கடந்த மார்ச் மாதம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்தை  அறிவித்தார். அதில், பெண்களுக்கு உதவும் வகையில் ஏப்ரல் முதல் 3 மாதங்களுக்கு அவர்களுடைய ஜன்தன் வங்கி கணக்குகளில் தலா ரூ.500 செலுத்தப்படும் என அறிவித்தார்.

அதன்படி பெண்களின் ஜன்தன் கணக்குகளில் முதல் தவணையாக ஏப்ரல் மாதம்  தலா ரூ.500 செலுத்தப்பட்டது. இந்நிலையில்,  2-வது தவணையாக மே மாதத்துக்கான தொகை ரூ.500 இன்று முதல் 5 நாட்களில் செலுத்தப்படுகிறது.

0 மற்றும் 1 முடியும் என்ற வங்கி கணக்கு எண் கொண்டவர்கள் இன்றும், வங்கி கணக்கு எண் 2 மற்றும் 3 என முடிந்தால் நாளையும் , வங்கி கணக்கு எண் 4 மற்றும் 5 என முடிந்தால் 6-ம்  தேதியும், வங்கி கணக்கு எண் 6 அல்லது 7 என முடிந்தால் 8-ம்  தேதியும்,  வங்கி கணக்கு எண் 8 அல்லது 9 என முடிந்தால் 11-ம் தேதியும் வங்கிக்கு சென்று தங்கள் கணக்கில் இருந்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

5 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

6 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

6 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

7 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

7 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

8 hours ago