பெண்களின் ஜன்தன் கணக்குகளில் 2-வது தவணையாக மே மாதத்துக்கான தொகை ரூ.500 இன்று முதல் 5 நாட்களில் செலுத்தப்படுகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் வரவில்லை என மத்திய அரசு மே 17-ம் தேதி வரை மீண்டும் ஊரடங்கு நீடித்து உள்ளது.
இந்த ஊரடங்கு காலத்தில் வேலையின்றி தவிக்கும் ஏழைகளுக்கு உதவும் வகையில் கடந்த மார்ச் மாதம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்தை அறிவித்தார். அதில், பெண்களுக்கு உதவும் வகையில் ஏப்ரல் முதல் 3 மாதங்களுக்கு அவர்களுடைய ஜன்தன் வங்கி கணக்குகளில் தலா ரூ.500 செலுத்தப்படும் என அறிவித்தார்.
அதன்படி பெண்களின் ஜன்தன் கணக்குகளில் முதல் தவணையாக ஏப்ரல் மாதம் தலா ரூ.500 செலுத்தப்பட்டது. இந்நிலையில், 2-வது தவணையாக மே மாதத்துக்கான தொகை ரூ.500 இன்று முதல் 5 நாட்களில் செலுத்தப்படுகிறது.
0 மற்றும் 1 முடியும் என்ற வங்கி கணக்கு எண் கொண்டவர்கள் இன்றும், வங்கி கணக்கு எண் 2 மற்றும் 3 என முடிந்தால் நாளையும் , வங்கி கணக்கு எண் 4 மற்றும் 5 என முடிந்தால் 6-ம் தேதியும், வங்கி கணக்கு எண் 6 அல்லது 7 என முடிந்தால் 8-ம் தேதியும், வங்கி கணக்கு எண் 8 அல்லது 9 என முடிந்தால் 11-ம் தேதியும் வங்கிக்கு சென்று தங்கள் கணக்கில் இருந்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…