ஹைதராபாத் மாநிலத்தில் 39 வயதாகியும் தனக்கு திருமணம் நடக்கவில்லை எனும் விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த 39 வயதுடைய ஸ்ரீகாந்த் சாரி என்பவர் பொற்கொல்லராக பணியாற்றி வந்துள்ளார். சாரி தான் வேலை பார்க்கக்கூடிய இடத்துக்கு அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சற்று மயக்கமுற்ற நிலையில் ஸ்ரீகாந்த் சாரி வீட்டிற்கு வந்துள்ளார். எனவே அவரது வீட்டின் உரிமையாளர் அவருக்கு உதவி வீட்டிற்குள் அழைத்துச் சென்றுள்ளார்.
வீட்டிற்குள் சென்றதும் தனது சகோதரிக்கு போன் செய்த சாரி, தான் தற்கொலை செய்யப்போவதாக கூறியுள்ளார். இதனால் பதற்றம் அடைந்த அவரது சகோதரி உடனடியாக கிளம்பி ஸ்ரீகாந்தின் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு சென்று பார்த்த பொழுது ஏற்கனவே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார். இதனை எடுத்து வீட்டின் உரிமையாளரை அழைத்த அவரது சகோதரி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கு தற்கொலைக்கான குறிப்பு எதுவும் கிடைக்காததால், அவரது சகோதரியிடம் விசாரணை நடத்தினர். அப்போது தனக்கு 39 வயதாகியும் திருமணம் நடக்கவில்லை என்ற விரக்தியில் அவர் உள்ளதாக தன்னிடம் கூறியதாக அவரது சகோதரி வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனையடுத்து போலீசார் ஸ்ரீகாந்த் சரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…
டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…
சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…
சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…
குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…