டெல்லியில் காதலிக்கு ஐபோனை சர்ப்ரைஸ் பரிசாக வழங்குவதற்காக ஐபோனைக் கொள்ளையடித்ததாக 21 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த நவம்பர் 23 அன்று மேற்கு டெல்லியில் உள்ள ஒரு பூங்காவில் ஒருவரின் கழுத்தில் கத்தியை வைத்து ஆப்பிள் ஐபோனை இரு நபர்கள் சேர்ந்து கொள்ளையடித்த சம்பவம் நடந்தது. குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
மேற்படி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட இரு கொள்ளையர்கள் துவாரகா செக்டார் 14 பகுதியில் மீண்டும் ஒரு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடுவதாக புதன்கிழமையன்று இரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் வலைவீசி குற்றவாளிகள் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஐபோனை மீட்கப்பட்டது.
அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது, இரண்டு திருடங்களில் ஒருவரின் காதலிக்கு ஐபோனை சர்ப்ரைஸ் பரிசாக வழங்குவதற்காக தான் இந்த குற்றத்தை செய்ததாகவும், சில மலைப்பிரதேசங்களுக்குச் செல்வதற்காக தாங்கள் மற்றொரு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
திருவள்ளூர் : மாவட்டம் களம்பாக்கத்தைச் சேர்ந்த தனுஷ் (23) என்ற இளைஞர், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயாஸ்ரீ (21) என்ற…
சென்னை : கடந்த ஜூன் 12-ஆம் தேதி அகமதாபாத் விமான நிலையத்தில் நடந்த விபத்தில் 274 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும்…
இஸ்ரேல் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல்…
டெல்லி : வாட்ஸ் அப் பயன்பாட்டில் உள்ள "சேனல்கள்" (Channels) என்ற அம்சத்தில் மெட்டா நிறுவனம் புதிதாக ஒரு சந்தா…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின்…
கொல்கத்தா : ஏர் இந்தியா விமானங்களில் அடுத்தடுத்து தொழில்நுட்பக் கோளாறுகள் கண்டறியப்பட்டு வருவதால் பயணிகள் மிகவும் அதிர்ச்சியடைந்து இனிமேல் விமானத்தில்…