இந்தியாவில் ஜைக்கோவ்-டி கொரோனா தடுப்பூசிக்கு விரைவில் ஒப்புதல் அளிக்கப்படவுள்ளது.
கொரோனா பெருந்தொற்று உலகத்தை பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதிலிருந்து காத்துக்கொள்ள தடுப்பூசிகளை செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் உள்நாட்டு தயாரிப்புகளாக கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் ஒப்புதல் அளிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி, அமெரிக்காவின் மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் மேலும் ஒரு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. சீரம் இந்தியா, பாரத் பயோடெக் நிறுவனங்களை தொடர்ந்து அகமதாபாத்தை சேர்ந்த ஜைடஸ் கெடிலா நிறுவனமும் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. ஜைகோவ்-டி என்ற பெயரில் உருவாக்கியுள்ள இந்த தடுப்பூசிக்கு இந்த மாத இறுதிக்குள் ஒப்புதல் கிடைத்து விட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. ஜைகோவ்-டி தடுப்பூசி இந்தியாவிலேயே முதன்முதலில் 12 முதல் 18 வயதுடையவர்களுக்காக தயாரிக்கப்பட்டது.
இந்த தடுப்பூசி நிறுவனம் இந்த தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்காக கடந்த மாதம் 1 ஆம் தேதி விண்ணப்பித்துள்ளது. மேலும், இந்த தடுப்பூசி ஊசி மூலம் மருந்து செலுத்தாமல் இன்ஜெக்டரை பயன்படுத்தி செலுத்தப்படும். இதனை அடுத்த படியாக இந்த தடுப்பூசியின் பக்க விளைவுகளும் மிகவும் குறைவானது. இந்த தடுப்பூசியை 50 இடங்களில் 1000 குழந்தைகள் உட்பட 28 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…