ஏழு மாதங்களில் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளை முடிக்க ஜைடஸ் காடிலா முடிவு.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்த வைரஸை அழிப்பதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்நிலையில், மருத்துவ நிறுவனமான ஜைடஸ் காடிலா, ஏழு மாதங்களில் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாக, அந்நிறுவனத்தின் தலைவர் வெள்ளிக்கிழமையன்று தெரிவித்திருந்தார்.
மேலும், இந்நிறுவனம் மனிதர்களிடம் பரிசோதனையை மேற்கொள்ள அனுமதி பெற்றுள்ள நிலையில், அடுத்த மூன்று மாதங்களில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை முடித்து தரவுகளை ஒழுங்குபடுத்துபவரிடம் சமர்ப்பிக்க நிறுவனம் முடிவு செய்துள்ளதாக, ஜைடஸ் காடிலா தலைவர் பங்கஜ் ஆர் படேல் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆய்வு முடிவுகளைப் பொறுத்து, சோதனைகளின் போது தடுப்பூசி பயனுள்ளதாக இருப்பதைக் கண்டறிந்தால், சோதனைகள் முடிவடைவதற்கும் தடுப்பூசி தொடங்கப்படுவதற்கும் மொத்தம் ஏழு மாதங்கள் ஆகலாம் என்று அவர் கூறினார்.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…