“திருப்பதி பெருமாள் வேடம் அணிந்த நித்தியானந்தா”…! பெருமாள் பக்தர்கள் கடும் எதிர்ப்பு…!

Published by
Edison

கைலாச நாட்டின் அதிபரான நித்தியானந்தா, தற்போது திருப்பதி பெருமாள் போன்று சங்கு,சக்கரம், நகைகள் மற்றும் மின்னும் கிரீடம் போன்றவை அணிந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.இதற்கு பெருமாள் பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பெங்களூருவில் பிடடி ஆசிரமம் நடத்தி வந்த நித்தியானந்தா,அடிக்கடி பாலியல்,கொலை போன்ற பல்வேறு வழக்குகளில் சிக்கினார்.2010ம் ஆண்டு,நித்தியானந்தா ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருந்து வந்த ரகசிய சிசிடிவி வீடியோ மர்ம நபர் ஒருவரால் தனியார் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது.அதன்பின்னர், நித்தியானந்தா மக்களிடையே பெரிதும் பிரபலமானார்.இதனைத்தொடர்ந்து, அகமதாபாத் பாலியல் வழக்கில் நித்தியானந்தா முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அகமதாபாத் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தார்.இதனால் தலைமறைவான நித்தியானந்தா இந்தியாவை விட்டு வெளியேறினார்.

நித்தியானந்தா, ஆஸ்திரேலியாவிற்கு சற்று அருகில் ஒரு தீவை வாங்கி கைலாசா என்று பெயரிட்டு,தன்னை அந்நாட்டின் பிரதமராக அறிவித்தார். பிறகு கைலாசா நாட்டிற்கென தனியாக ரிசர்வ் வங்கி ஒன்றையும் ஆரம்பித்துள்ளார்.மேலும்,கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியன்று நித்தியானந்தா கைலாசா நாட்டிற்குரிய நாணயங்களை  வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில்,நித்தியானந்தா திருப்பதி பெருமாள் போன்று வேடமணிந்து புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தன் பக்தர்களை கைலாசா நாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.மேலும்,”பக்தர்கள் கைலாசா நாட்டின் அதிகாரப் பூர்வ இணையதளத்தில் இ-பாஸ்போர்ட்டை இலவசமாகப் பெற்றுக்கொண்டு,கைலாசாவிற்கு வருமாறும் ,உலகில் உள்ள ஒரே இந்து நாடான கைலாசாவை ஆதரிக்க வேண்டும்”,என்றும்  கூறியுள்ளார்.

நித்தியானந்தா வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்திற்கு கடுமையான கண்டனங்கள் மற்றும் விமர்சனங்கள் சமூக ஊடகங்களில் எழுந்துள்ளன.மேலும்  நித்தியானந்தாவின் இத்தகைய செயலுக்கு பெருமாள் பக்தர்கள் தங்களின் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

24 minutes ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

2 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

2 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

3 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

5 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

6 hours ago