புதுச்சேரி

தமிழிசை மீதான ஊழல் புகாரை வெளியிடுவேன்.! புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி.!

Published by
மணிகண்டன்

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மீதான குற்றசாட்டுகளை வெளியிடுவேன் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

இன்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயண சாமி , புதுச்சேரி மாநில அரசு பற்றியும், புதுச்சரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பற்றியும் தனது விமர்சனத்தை முன் வைத்தார். புதுவை அரசு மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை முதல்வர் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், பொதுப்பணித்துறையில் 20 சதவீத கமிஷன் வாங்குகிறார்கள். கலால்துறை முறைகேடு தொடர்பாக நிதித்துறை செயலாளர் ராஜூ, கலால்துறை துணை ஆணையர் சுதாகர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நகரப்பகுதியில் அமைக்கப்படும் கண்காணிப்பு கேமராக்களை ஒருங்கிணைக்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்க 170 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளது.

இதனை அமைக்கும் பொறுப்பு  மத்திய அரசு நிறுவனமான ரெயில்டெல்லுக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால் அவை, தனியார் நிறுவனத்துக்கு வழங்கும் வகையில் மேற்கண்ட இருவரும் செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அரசு செயலாளராக இருந்த அருண் புதுச்சேரி தலைமை செயலாளருக்கு புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் முகாந்திரம் இருந்த காரணத்தால், அதனை புதுசேரி தலைமை செயலாளர் மத்திய உள்துறைக்கு அனுப்பியுள்ளார். உள்துறைதான் அவர்களுக்கு முக்கிய துறைகளை ஒதுக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. அதன்பின்னர் தான் இருவரும் மாற்றப்பட்டு உள்ளனர். தலைமை செயலாளர் இதில் நடவடிக்கை எடுக்காதிருந்தால் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்க வாய்ப்புள்ளது. முதலமைச்சரின் அனுமதி அல்லது தலையீடு இல்லாமல் அந்த அதிகாரிகள் இவ்வாறு செய்து இருக்க மாட்டார்கள்.

முதலமைச்சர் மற்றும் புதுச்சேரி அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளேன். ஆனால் அவர்கள் பதில் சொல்வதில்லை. புதுச்சரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மட்டும் தற்போது வரை பதில் கூறி வருகிறார். விரைவில் துணைநிலை ஆளுனர் தமிழிசை மீதான ஊழல் புகாரையும் வெளியிடுவேன். இந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது என தனது குற்றசாட்டுகளை முன்னாள் முதல்வர் நாராயணசாமி முன் வைத்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

4 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

5 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

5 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

7 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

7 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

7 hours ago