[Representative Image]
கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் என்பது பல இடங்களில் வெகுவாக பரவி வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் என்பது அதிகமாகியுள்ளது. இந்நிலையில், குருமாம்பேட் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி ஒருவர் டெங்குவால் உயிரிழந்துள்ளார்.
கல்லூரி மாணவி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் மாணவி நோயில் இருந்து மீண்டு வரவில்லை. இந்நிலையில் மாணவி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து வெளியான மருத்துவமனை சார்பில் வெளியான அறிக்கையில், மாணவி டெங்கு நோய் காரணத்தால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் மழைக்காலம் வர உள்ளதால் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு உள்ளிட்ட நோய்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முன்னதாக, சென்னை மதுரவாயல் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த அய்யனார் மற்றும் சோனியா தம்பதியினரின் நான்கு வயது மகன் ரக்ஷன் டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த செப்-10ம் தேதி உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
திருப்பூர் : மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன்…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் கடந்த ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியாவின் AI-171 விமானம் (போயிங் 787-8…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) சட்டமன்றக் குழு கொறடாவாக உள்ள சேலம் மேற்கு எம்எல்ஏ அருளை மாற்ற…
டெல்லி : இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி (ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 7, 2025, ராஜ்கீர், பீகார்)…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…