Thirukameeshwar Temple [Image source : Twitter/@@ANamassivayam]
திருக்காமீஸ்வரர் கோவில் தேர் திருவிழாவில் கலந்து கொண்ட புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.
புதுச்சேரியை மாநிலத்தில் வில்லியனூரில் உள்ள திருக்காமீஸ்வரர் கோவிலில் திருவிழாவானது கடந்த 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்று வந்தன. நேற்று முன்தினம் திருக்கல்யாணம் நடந்தது. அதனை அடுத்து நேற்று பிரம்மாண்ட தேர் திருவிழா நடைபெற்றது.
இந்த தேர் திருவிழாவானது காலை 7:45க்கு தொடங்கியது. இதனை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் வடம் பிடித்து தேரை இழுத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்தக் கோவிலானது கடந்த 12ஆம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. இந்த கோவிலின் தேர் திருவிழாவானது அங்கு ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை ஒட்டி வில்லியனூரில் பல்வேறு இடங்களில் அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
நேற்று தேர் திருவிழாவை நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து, இன்று தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து நாளை முத்து பல்லாக்கு உற்சவம் நடைபெற உள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…