அடக்கொடுமையே..கணவரை காணவில்லை..னு..புகாரளிக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய காவல்..! கையும்களவுமாக சிக்கியது எப்படி?

Published by
kavitha
  • திருச்சி அருகே கணவரை காணவில்லை என்று ஒரு பெண் புகார் அளிக்க வந்துள்ளார்
  • புகார் அளிக்க வந்தவரை மயக்கி குடும்பம் நடத்தியாக தலைமைக்காவல் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

திருச்சி மாவட்டம் அருகே உள்ள புலிவலத்தைச் சேர்ந்தவர் சிராஜுநிஷா என்பவரின் தம்பி முகம்மது ஜக்ரியா இவர் ஒரு பெண்ணை 7 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டு உள்ளார். சில தினத்திற்கு முன் மனைவியை கைவிட்டு வேற ஒரு பெண்ணுடன் அவர் தலைமறைவாகி விட்டதாக அக்கம்பக்கதினர் கூறுகின்றனர்.

காதல் திருமணம் நடைபெற்றதால் அப்பெண்ணுடன் சிராஜுநிஷாவுக்கு எந்தவித பேச்சுவார்த்தையும் இல்லை என்று கூறப்படுகிறது.இந்நிலையில் தம்பியைக் காணவில்லை என்று சிராஜுநிஷாவும்,தன் கணவரைக் காணவில்லை என்று காதல் திருமணம் செய்து கொண்ட அப்பெண்ணும் தனித்தனியாக புலிவலம் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.இவர்களின் குடும்ப பிரச்சனையை விசாரித்து வந்த புலிவலம் காவல்நிலைய தலைமைக் காவலர் ராமருக்கு  எப்படியோ சகோதரனின் மனைவியுடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நெருக்கத்தை அறிந்த சிராஜுநிஷா காவலருக்கும் அந்த பெண்ணுக்குமான நெருக்கத்தை அறிந்து கொண்டு அவர்களை கையும் களவுமாகப் பிடிக்க காத்திருந்தார்.

சனிக்கிழமை நள்ளிரவில் அப்பெண்ணின் வீட்டு வாசலில் ராமரின் இருசக்கர வாகனம் ஒன்று நிற்பதை கவனித்த சிராஜுநிஷா தாமதிக்காமல் அந்த வீட்டைப் பூட்டிவிட்டு உறவினர்களுக்குத் தகவல் கொடுத்துவிட்டார் அங்கு வந்த உறவினர்கள் முன்னிலையில் வீட்டின் கதவைத் திறந்துள்ளனர்.உள்ளே இருந்த கையும் களவுமாக சிக்கிக்கொண்டனர்.இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.இந்த தகவலை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியா உல் ஹக் தலைமைக் காவலர் ராமரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். காவல் நிலையத்திற்கு கணவரைக் காணவில்லை என புகார் அளிக்க வந்த பெண்ணிண் கணவன் போலவே மாற எண்ணிய தலைமைகாவலர் செயலை பொதுமக்கள் விமர்சிக்கின்றனர்.

Recent Posts

Ostrava Golden Spike : ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நீரஜ் சோப்ரா.!

Ostrava Golden Spike : ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நீரஜ் சோப்ரா.!

மொராவியன்-சிலேசியன் : செக் குடியரசின் ஆஸ்ட்ராவா நகரத்தில் நடைபெற்ற 'ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' தடகளப் போட்டியில் இந்தியாவின் 'தங்க மகன்'…

10 minutes ago

“ஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகுதான் இந்து மதம் வந்தது” – விசிக தலைவர் திருமாவளவன்.!

சென்னை : விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் வழங்கும் விழா, நேற்றிரவு கலைவாணர் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில்…

29 minutes ago

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி.! இந்திய அணி தோல்விக்கு காரணம் என்ன.?

லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி (65) மற்றும்…

42 minutes ago

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…

11 hours ago

ஈரானில் தமிழக மீனவர்கள் – மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…

12 hours ago

INDvsENG : நீங்க நிறுத்திக்கோங்க நான் ஆடுறேன்! போட்டியின் நடுவே விளையாடிய மழை!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…

12 hours ago