தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு ரூ.38.37 கோடியில் 50% மானியத் தொகையை பள்ளிக்கல்வித்துறை இன்று விடுவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல மாதங்களாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. எனினும்,தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளது. இதனால்,அனைத்து ஆசிரியர்களும், பணியாளர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும்,தமிழகத்தில் உள்ள 6,177 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் நடப்பு கல்வியாண்டுக்கு ரூ.38.37 கோடி மானியம் வழங்கப்படும்.
இந்நிலையில்,செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால்,அதன் முன்தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக,ரூ.38.37 கோடியில் 50% மானியத் தொகையை இன்று விடுவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…
டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…
ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…
ஆந்திரா : இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில், எல்லைப் பகுதிகளை கண்காணிக்க உதவும் EOS-9 (RiSat-…
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…