[Representative Image]
தமிழகத்தில் இருந்து வங்கக்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை ராணுவம் கைது செய்யும் செயல் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தை தீர்வு காண தமிழக அரசு, மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனாலும், அவ்வப்போது கைது, பிறகு சில நாட்கள் கழித்து நிபந்தனைகளுடன் விடுதலை என நடந்து வருகிறது.
அப்படி தான் தற்போது , நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 3ஆம் தேதி 10 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்களை கடந்த 7ஆம்இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்தனர்.
இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 10 தமிழக மீனவர்கள் திரிகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அவர்களை 21 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கடந்த 21ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மீனவர்களை இலங்கை நீதிமன்றம் நிபந்தனைகளுடன் விடுதலை செய்தது.
இந்நிலையில் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட, நாகை மாவட்ட 10 மீனவர்கள், இலங்கையில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்தடைந்தனர். தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களை வரவேற்று, அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…