தமிழகத்தில், நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள வடுகப்பட்டியை சேர்ந்தவர் நாகலிங்கம், இவருக்கு வயது 100. இவரது மனைவி, நாகரத்தினம். சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இந்த தம்பதிக்கு, மூன்று மகன்கள் மற்றும் ஏழு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று, முதியவர், நாகலிங்கத்திற்கு, 100வது பிறந்த நாள் ஆகும். இதனையொட்டி, அவரது பிறந்த நாள் விழாவை , கோலாகலமாக கொண்டாட முடிவு செய்தனர் அவரது குடும்பத்தினர். எனவே, பல்வேறு ஊர்களில் வசித்து வரும், அவரது, மகன், மருமகள், மருமகன், பேரன், பேத்தி, கொள்ளு பேரன், கொள்ளு பேத்திகள் என, 150 பேர், ஒரே இடத்தில் குழுமினர். பின் அவர்கள் நூறு ஆண்டுகள் கண்ட தனது தந்தை, ‘கேக்’ வெட்டி, தனது பிறந்தநாள் கொண்டாடினார். மேலும், அவரது பிறந்த நாளுக்காக அறுசுவை விருந்தும் பரிமாறப்பட்டது. உறவினர்கள் அனைவரும், நாகலிங்கம் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றனர். தனது நூற் வயதுக்கான ரகசியம் குறித்து மனம் திறந்த அவர், ”தினமும், வாழை இலையில் தான் சாப்பிடுவேன். அளவான உணவு மட்டும் தான் உட்கொள்கிறேன்; அதனால், ஆரோக்கியமாக இருக்கிறேன்,” என்று சுருக்கமாக முடித்துவிட்டார்.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…