கோவையில் பரபரப்பு.! சுவற்றில் துளையிட்டு 100 சவரன் நகைகள் கொள்ளை.!

Published by
மணிகண்டன்

கோவை காந்திபுரத்தில், 100 அடி சாலையில் அமைந்துள்ள பிரபல நகைக்கடையில் நேற்று இரவு கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. கோவையில் மிகவும் பரபரப்பாக இயங்கி வரும் இந்த சாலையில் பல்வேறு பிரபலமான பெரிய கடைகள் முதல் பல்வேறு சிறிய கடைகள் வரையில் இயங்கி வருகின்றன.

எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இந்த பகுதியில் இயங்கி வரும் நகைக்கடையில் நேற்று நள்ளிரவு இந்த கொள்ளை சம்பவம்கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம கும்பல் நகைக்கடை சுவற்றை துளையிட்டு இந்த கொள்ளை சமபவத்தை நிகழ்த்தியுள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவத்தில் எவ்வளவு நகைகள் திருடப்பட்டுள்ளது என்ற தெளிவான விவரம் இன்னும் வெளியாகவில்லை. இருந்தும் முதற்கட்ட தகவலின்படி 100 சவரன் அளவில் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இது தொடர்பாக தகவல் அறிந்தவுடன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.  3 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தடவியல் துறையினர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மேலும், பரபரப்பாக இயங்கி வரும் இந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

22 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago