[FILE IMAGE]
மாணவர்கள் இடை நின்றதற்கான காரணங்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
தமிழ்நாட்டில் நேற்று 6 முதல் 12-ஆம் வகுப்பு வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. கோடை விடுமுறைக்கு பிறகு மீண்டும் பள்ளிகளுக்கு வந்த மாணவர்களை பூங்கொத்து கொடுத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வரவேற்றார். இதன்பின் பேசிய அமைச்சர், அரசுப்பள்ளிகளில் 100% தேர்ச்சி கொடுக்க ஆசிரியர்கள், அதிகாரிகள் இலக்கு நிர்ணயிக்க வேண்டும்.
தமிழகத்தில் 8,340 நடுநிலைப் பள்ளிகள், 3,547 உயர்நிலை, 4221 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 16,108 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளில் முதலாம் வகுப்பில் 1. 31 லட்சம் குழந்தைகள் சேர்ந்துள்ளனர். மாணவர் சேர்க்கையை ஆகஸ்ட் வரை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். இந்த நிலையில், பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை களைய மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
2023-24-ல் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து 100% கல்வி கற்பதை உறுதி செய்ய வேண்டும். அதன்படி, தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை 100% மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்த வேண்டும். பள்ளி செல்லாத, இடைநின்ற குழந்தைகளின் தரவுகளை செல்போன் செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்கள் இடை நின்றதற்கான காரணங்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொருளாதார சூழல், குடும்ப சூழல் காரணமாக பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…