டெங்கு காய்ச்சலை பரப்பினால் 100 முதல் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் – சென்னை மாநகராட்சி.!

Published by
Ragi

டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்து வருவதால் அவற்றை பரப்ப காரணமாக இருக்கும் பெரிய கட்டிடங்களின் உரிமையாளர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னையில் கொரோனாவின் பாதிப்பு ஓரளவுக்கு கட்டுப்படுத்தி வரும் நிலையில், தற்போது டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. எனவே டெங்கு , மலேரியா, சிக்கன் குனியா உள்ளிட்ட நோய்களை பரப்பும் கொசுக்களை அழிப்பதற்பான நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது. இந்த நிலையில் பெரிய அடுக்குமாடி கட்டிடங்கள், கடைகள், ஓட்டல்கள், பள்ளிகள், கல்லூரிகள் என்பவைகளே கொசுக்கள் வளர காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே கொசுக்கள் வளர காரணமாக இருக்கும் ஒவ்வொன்றின் உரிமையாளர் மீது தனித்தனியாக அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதோ அந்த பட்டியல் :

குடியிருப்பு வீடுகள் என்றால் முதல் நோட்டீஸ் அனுப்பப்படும். அதற்கு பின்னரே 100 முதல் 200 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அடுக்குமாடி குடியிருப்புகள் – ரூ. 500 முதல் 5000 வரை

1000மாணவர்களுக்கு கீழுள்ள பள்ளி, கல்லூரிகள் – ரூ. 5000 முதல் 50,000 வரை

1000 மாணவர்களுக்கு மேலுள்ள பள்ளி, கல்லூரிகள் – ரூ. 10,000 முதல் 1 லட்சம் வரை

வணிக வளாகங்கள் – ரூ. 10,000 முதல் 1 லட்சம் வரை

2 நட்சத்திரத்திற்கு கீழுள்ள ஓட்டல்கள் – ரூ. 5,000 முதல் 25,000 வரை

2 நட்சத்திரத்திற்கு மேலுள்ள ஓட்டல்கள் – ரூ. 1 லட்சம் முதல் 10 லட்சம் வரை

ஐந்தாயிரம் அடிக்கு குறைவான கட்டுமான இடங்கள் – ரூ. 10,000 முதல் 50,000வரை

ஐந்தாயிரம் அடிக்கு அதிகமான கட்டுமான இடங்கள்-ரூ. 1 லட்சம் முதல் 10 லட்சம் வரை

50 படுக்கைகளின் கீழுள்ள மருத்துவமனைகள் – ரூ. 25,000 முதல் 1 லட்சம் வரை

50 படுக்கைகளின் மேலுள்ள மருத்துவமனைகள்- ரூ. 1 லட்சம் முதல் 10 லட்சம் வரை

Published by
Ragi

Recent Posts

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

1 hour ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

2 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

3 hours ago

தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… சில்லி சில்லியாய் நொறுக்கிய இந்தியா.! சிதறி கிடக்கும் ஏவுகணை, ட்ரான் பாகங்கள்.!

டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…

4 hours ago

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

4 hours ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

4 hours ago