தமிழ்நாடு

ஆளுக்கு 1000 ரூபாய்.. 250 கோடி செலவு செய்து ஆள் சேர்க்கிறார்கள் – டிடிவி தினகரன் விமர்சனம்

Published by
பாலா கலியமூர்த்தி

அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு நாளை பிரமாண்டமாக மதுரையில் நடைபெற உள்ளது. இதற்காக மதுரை வலையன்குளம் ரிங் ரோடு பகுதியில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றப் பிறகு நடைபெறும் முதல் மாநாடு இதுவாகும். அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக தங்களின் பலத்தையும், செல்வாக்கையும் காட்டும் வகையில் மாபெரும் மாநாடாக இந்த எழுச்சி மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளது.

மதுரையில் அதிமுக எழுச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, மதுரை விமான நிலையம் பின்புறம் 65 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் பந்தல் அமைக்கப்படும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதிமுக மாநாட்டிற்கு சுமார் 20 லட்சம் தொண்டர்கள் வருகை தருவார்கள் என கூறி வருகின்றனர். சுமார் 15 லட்சம் பேருக்கு உணவு தயாரிக்கும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதனால் 20க்கும் மேற்பட்ட இடங்களில் உணவருந்தும் வகையில் பந்தல்களும் அமைக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், திருச்சியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நாளை மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டிற்கு, ஒவ்வொரு பகுதியில் இருந்து ஒவ்வொருவருக்கும் ரூ.1000 கொடுத்தும், இன்னும் பிற வசதிகள் அளித்தும் அழைக்கப்டுவதாகவும், கடந்த 4 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது ஈட்டிய பணத்தில் இருந்து 250 கோடியை மக்களுக்கு வழங்கி, மாநாட்டிற்கு ஆள் சேர்க்கிறார்கள் எனவும் விமர்சித்துள்ளார்.

ஆனால், மக்கள் பெறுவார்களா? அதிமுக மாநாட்டிற்கு மக்கள் செல்வார்களா என்று தெரியாது. எடப்பாடி பழனிசாமியை நம்பி மக்கள் வரமாட்டார்கள் என்றும் அதிமுக மாநாடு வெற்றி பெறாது எனவும் கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமி அதிமுகவை கபளீகரம் செய்துவிட்டார். அதிமுகவை ஜனநாயக ரீதியில் நிச்சயம் மீட்டெடுப்போம்.

அமமுக சார்பிலும் மாநாடு நடத்தப்படும் என கூறிய டிடிவி, நானும், ஓபிஎஸ்யும் இணைந்து இனி வரும் காலங்களில் அரசியலில் பயணிப்போம்.  பாஜக கூட்டணியில் அதிமுக இருக்கும் பட்சத்தில் அந்த கூட்டணியில் அமமுக இணையுமா என்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுப்போம் எனவும் தெரிவித்தார். மேலும், 2026ம் சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்துவதற்கு அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பிறந்த நாள் கொண்டாடிய தோனி…சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…

22 minutes ago

ராமதாஸுக்கு போட்டியாக நாளை நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்தும் அன்புமணி!

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

1 hour ago

கூட்டத்தை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜுரம் வரலாம் – எடப்பாடி பழனிசாமி சாடல்!

கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…

2 hours ago

லக்கி பாஸ்கர் 2 நிச்சயம் வரும்… உறுதி கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி!

ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…

3 hours ago

முருகன் கோயில் குடமுழுக்கு..”என்னை அனுமதிக்கவில்லை”… செல்வப்பெருந்தகை வேதனை!

காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

3 hours ago

பூனையை பார்த்துக்கோங்க என்னோட சொத்து உங்களுக்கு…ஆஃபர் கொடுத்த சீனா தாத்தா!

குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…

4 hours ago