தீபாவளியை முன்னிட்டு மொத்தம் 16,895 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.! அமைச்சர் அறிவிப்பு.!

Published by
மணிகண்டன்

வரும் நவம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொதுவாகவே விடுமுறை தினத்தை முன்னிட்டு வெளியூரில் வேலை பார்க்கும் ஊழியர்கள் சொந்த ஊர் திரும்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.

அதே போல இந்தாண்டு தீபாவளி விடுமுறையை முன்னிட்டு நவம்பர் 9ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். சென்னையில் இருந்து மட்டும் 10,975 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும், மற்ற ஊர்களில் இருந்து 5,920 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் மொத்தமாகவும் 16,895 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என்றும் அறிவித்துள்ளார் .

மேலும், சொந்த ஊர் சென்ற மக்கள் மீண்டும் வேலைக்கு திரும்ப எதுவாக 13, 14, 15 ஆகிய தேதிகளிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்றும், வழக்கமாக 2100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் இந்த வருடம் கூடுதலாக 4000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மாதவரம், தாம்பரம் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம்,  பூந்தமல்லி, கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.  பயணிகள் தேவைக்கேற்ப அடிப்படை வசதிகள் பேருந்து நிறுத்தத்தில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

கோயம்பேட்டில் 10 முன்பதிவு நிலையங்களும், தாம்பரம் மெப்கோவில் ஒரு முன்பதிவு நிலையமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே போல இணைய வழியிலும் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை 68000 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

பயணிகள் தங்கள் சந்தேகங்களை கேட்பதற்கு, 9445014450 , 9445014436 ஆகிய தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. விழா காலங்களில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால், 1800-425-6151 என்ற இலவச எண் மூலமாகவோ, 044-24749002, 26280445, 26281611 ஆகிய எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் பேருந்து நிலையம் வருவதற்கு கூடுதல் இணைப்பு பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…

5 hours ago

போர் எப்போது.? ”நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது” – டிரம்ப் சூசக பதில்.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…

5 hours ago

தமிழகம் முழுவதும் ஜூலை 9ம் தேதி டாஸ்மாக் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் பணியாளர் சங்கம்.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…

6 hours ago

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…

7 hours ago

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…

8 hours ago

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…

8 hours ago