10thResults Kriti Varma [Image source : file image ]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களின் மதிப்பெண்கள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது. அதில், இந்தாண்டு10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9.4 லட்சம் மாணவ மாணவியர்கள் எழுதியிருந்தனர். அதில் மொத்தம் 91.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
இந்த நிலையில், 2 கைகளை இழந்த 10-ஆம் வகுப்பு மாணவர்ஒருவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளியளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே நெடுமருதி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த மாணவன் தான் க்ரித்தி வர்மா.
சிறுவயதிலேயே தந்தையை இழந்த க்ரித்தி வர்மாவை அவரது தாயார் கூலி வேலைக்கு சென்று படிக்க வைத்து வருகிறார். க்ரித்தி வர்மா 2 கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளி மாணவர். தொடர்ந்து நம்பிக்கையுடன் படித்து வரும் இந்த மாணவன் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 437 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இந்த மாணவனை பலரும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…