பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!
எல்லை தாண்டிய பாகிஸ்தானின் ட்ரான் தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி ஒன்பது பயங்கரவாத உள்கட்டமைப்பு இலக்குகளை குறிவைத்து இந்திய ஆயுதப் படைகள் தாக்கியது. இதற்கு பதிலடியாக, நான்காம் நாளாக இன்றும் இந்தியா – பாகிஸ்தான் இடையே தாக்குதல் நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் கடந்த நான்கு நாட்களில் தீவிரமடைந்த எல்லை தாண்டிய சண்டையில் ஒரு மூத்த அரசு அதிகாரி உட்பட குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை பூஞ்சில் 12 பொதுமக்களும், வெள்ளிக்கிழமை உரி மற்றும் பூஞ்சில் இருவர் கொல்லப்பட்டனர். இன்று காலை பாகிஸ்தான் நடத்திய ட்ரான் தாக்குதலில் ஒரு மூத்த அரசு அதிகாரி உட்பட மேலும் ஐந்து பொதுமக்கள் உயிரிழந்தனர் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.
Deeply pained by the loss of innocent lives due to recent shelling from Pakistan. My Government is taking every possible measure to minimise the hardship of our people.
While no compensation can ever replace a loved one or heal the trauma caused to the family, as a gesture of…
— Office of Chief Minister, J&K (@CM_JnK) May 10, 2025
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025