[Representative Image]
கோவை: 2015இல் பட்டியலின இளைஞர் அடித்துக்கொல்லப்பட்ட வழக்கில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு கோவையில் ஒரு கிரிக்கெட் மைதானத்தில், கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்பட்ட தகராறில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த தாமரை கண்ணன் என்பவர் அடித்து கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை கோவை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றத்தில் 8 ஆண்டுகளாக நடைபெற்றது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட 14 பேரில் ஒருவர் வழக்கு நடைபெற்ற இடைப்பட்ட காலத்தில் உயிரிழந்தார். ஒருவர் நிரபராதி என விடுவிக்கப்பட்டார். மீதம் உள்ள 12 பேர் குற்றவாளிகள் என உத்தரவிடப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 12 பேரில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2 பேருக்கு ஒரு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தல விக்கி, தோப்பு மகேந்திரன், டிப்ஸ் கார்த்திக், கவாஸ்கான் , சுரேஷ், பிரகாஷ், நவீன், விமல், கௌதம், கலைவாணன் ஆகிய 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டணை விதிக்கப்பட்டுள்ளது .
கிறிஸ்டோபர் கருப்பு கௌதம் ஆகியோருக்கு ஒரு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனை விதிக்கப்பட்ட அனைவரும் இன்று தீர்ப்பு உத்தரவு வெளியான பிறகு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…
சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…