தமிழகத்தில் 13,191 பேருக்கு கொரோனா.! 87 பேர் உயிரிழப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழகத்தில் இன்று மேலும் 743 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளார். ஏற்கனவே, கொரோனாவால் 12,448 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 13,191 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 557 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 8,228 ஆக உயர்ந்துள்ளது.

இதனையடுத்து கொரோனாவுக்கு இன்று 3 பேர் பலியாகியுள்ளனர். இதனால், உயிரிழப்பின் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் 987 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 5,882 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று கொரோனா கண்டறியப்பட்ட 743 பேரில் 83 பேர் வெளிமாநிலம் சென்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையடுத்து இன்று 11,894 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 3,60,068 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இன்று கொரோனா கண்டறியப்பட்ட 743 பேரில் 442 பேர் ஆண்களும், 301 பேர் பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 7,219 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை பாதிக்கப்பட்ட 13,191 பேரில் 8496 பேர் ஆண்களும், 4692 பேர் பேர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

2 hours ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

3 hours ago

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

3 hours ago

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

6 hours ago

6-ம் தேதி மழை இருக்கு.! எங்கெல்லாம் தெரியுமா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

6 hours ago

கள்ளழகர் திருவிழா: ”இதை செய்யவே கூடாது” கோவில் நிர்வாகம் விதித்த கட்டுப்பாடுகள்.!

மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…

7 hours ago