தென்மேற்கு பருவ மழை காரணமாக கர்நாடகாவில் பெய்து வரும் கன மழையால் அங்கு உள்ள கபினி மற்றும் கிருஷ்ணாராஜா சாகர அணைகள் வேககமாக நிரம்பி வருகிறது.கபினி அணை நிரம்பி உள்ள நிலையில் வினாடிக்கு 1,25000 கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளது.
கபினி அணைக்கு அருகில் உள்ள தாரக மற்றும் நாகுல் தடுப்பணையில் இருந்து 25,000 கன அடி நீர் திறக்கப்பட்டு மொத்தமாக 1,50,000 கன அடி நீர் காவேரி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டு உள்ளது.
இரண்டு நாள்களுக்கு முன்பு தான் கபினி அணையில் இருந்து 1,00,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.இந் நிலையில் தர்மபுரியில் உள்ள ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரித்து உள்ள நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கிருஷ்ணாராஜா சாகர அணையில் இருந்து 500 கன அடி மட்டுமே தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.ஆனால் இந்த அணைக்கு வினாடிக்கு 1,15,000 கன அடி நீர்வரத்து உள்ளதால் இன்று இரவு அல்லது நாளை காலை தண்ணீர் திறப்பதற்கான வாய்ப்பு உள்ளதால் அப்படி திறக்கப்பட்டால் இன்னும் இரண்டு நாள்களில் ஒகேனக்கலுக்கு 2,50,000 கன அடி நீர் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…
விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…