புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே அதிமுக பிரமுகர் மூர்த்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 16 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
காரப்பட்டு கிராமத்தை சேர்ந்த வீராச்சாமி. விராலிமலையில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன் அதிமுக பிரமுகர் மூர்த்திக்கும் , வீராச்சாமிக்கும் இடையே பிரச்சினை இருந்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி மூர்த்தி அழைத்ததன் பேரில் வீராச்சாமி, அவரது மகன் முத்து இவர்களது உறவினர்கள் இரண்டு பேர் தோட்டத்துக்கு சென்றுள்ளனர்.
அப்போது அங்கு 10-க்கும் மேற்பட்ட கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் வீராச்சாமி உள்ளிட்ட நான்கு பேரையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலே வீராச்சாமி, அவரது மகன் முத்து ஆகிய இருவரும் இறந்தனர்.
படுகாயமடைந்த ஜெயராமன், சிவசங்கு ஆகியோரை போலீஸார் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூர்த்தி ஜாமீனில் வெளிவந்த நிலையில் களமாவூரில் உள்ள தனது வீட்டின் அருகே இருந்த மூர்த்தியை மர்ம கும்பல் அரிவாளால் கொடூரமாக வெட்டினர். இதில் மூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.…
கேரளா : மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் இன்று (ஜூன்…
சென்னை : நடிகை மீனாவுக்கு தமிழக பாஜக மூலம் முக்கிய பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.…