முக்கியச் செய்திகள்

100 நாளில் 2.25 லட்சம் பார்வையாளர்கள்.! உலகப்புகழ் பெரும் கீழடி அருங்காட்சியகம்.!

Published by
Muthu Kumar

கீழடி அருங்காட்சியகம் திறக்கப்பட்டு 100 நாட்களில் 2.25 லட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் கீழடி அருங்காட்சியகம், பழங்கால தொல்லியல் பொருட்கள் மற்றும் பண்டைய வரலாற்றின் காட்சிகளுடன் நவீன வடிவில் 18 கோடியே 41 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த நவீன கலை அருங்காட்சியகத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த மார்ச் 5 ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

இந்த கீழடி அருங்காட்சியகம் திறக்கப்பட்ட முதல் ஒருமாதம் பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டது. அதன்பின் ஏப்ரல் 1 முதல் கட்டணமாக பெரியவர்களுக்கு 15 ரூபாய், சிறியவர்களுக்கு 10 ரூபாய் மற்றும் மாணவர்களுக்கு 5 ரூபாய் என வசூலிக்கப்பட்டது. மேலும் இங்கு கீழடியின் வரலாற்றை சொல்லும் மினி ஏசி தியேட்டர் வசதியும் உள்ளது.

இங்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது, வெளிநாட்டினர் முதற்கொண்டு நம் வரலாற்றை கூறும் கீழடி அருங்காட்சியகத்துக்கு வந்து பார்வையிட்டு செல்கின்றனர். இந்த அருங்காட்சியகம் திறக்கப்பட்டு 100 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை 2.25 லட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர்.

Published by
Muthu Kumar

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

13 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

14 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

14 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

15 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

15 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

17 hours ago