ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே நொச்சிகுளம் கிராமத்தை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் நிமிஸ் (8) ,சூர்யா (8) சூரிய இவர்கள் இருவரும் அங்குள்ள ஊருணியில் விளையாடி கொண்டிருந்தபோது உருண்டையான ஒரு பொருள் இருப்பதை பார்த்து இருவரும் அந்த பொருள் பந்து என நினைத்து தூக்கி வீசி விளையாடிக் கொண்டிருந்தப்போது அந்த பொருள் பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்தது.
நல்ல வேலையாக தூக்கி எறிந்தபோது மேலே குண்டு வெடித்ததால் அந்த சிறுவர்கள் இருவரும் லேசான காயத்துடன் தப்பினர். இந்த சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்து காயமடைந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவர்கள் தூக்கி விளையாடியது நாட்டு வெடிகுண்டு என போலீஸ் விசாரணையில் தெரிந்தது. மேலும் அங்கு தொடர்ந்து நடத்திய சோதனையில் ஒரு வெடி குண்டை கண்டுபிடித்தனர். குண்டு வைத்தது யார் ? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…