தமிழகத்திற்கு புனேவிலிருந்து 2 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வருகை!

Published by
Rebekal

தமிழகத்திற்கு தற்பொழுது புனேவிலிருந்து 2 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மக்களும் கொரோனவை ஒழிப்பதற்கு தடுப்பூசி தான் பேராயுதம் என நம்பி தடுப்பூசி போடுவதில் ஆர்வம் கட்டி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தின் சில பகுதிகளில் தடுப்பூசி தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வருகிற மாதத்தில் தமிழகத்திற்கு 71 லட்சம் தடுப்பூசிகள் தருவதாக மத்திய அரசாங்கம் கூறியதாகவும், இன்று மாலை புனேவிலிருந்து தமிழகத்திற்கு 2 லட்சம் தடுப்பூசிகள் வரும் எனவும் தமிழக மருத்துவத்துறை அமைச்சார் மா. சுப்பிரமணியம் கூறியிருந்தார்.

அதன்படி புனேவிலிருந்து தமிழகத்திற்கு 2 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வந்துள்ளதுடன், அவற்றை மாவட்டங்களுக்கு  பிரித்து அனுப்பும் பணியும் தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

4 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

5 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

6 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

6 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

8 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

9 hours ago