#Breaking: தமிழகத்தில் மேலும் 2 பேர் பலி..72 பேருக்கு கொரோனா.!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,755 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 22 ஆகவும் உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே 1,683 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 1,755 ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இன்று மேலும் 2 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில், மொத்தம் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. சோகத்திலும் ஒரு சந்தோசம் என்னவென்றால் இன்று மட்டும் 114 பேர் வைரஸில் இருந்து குணமடைந்த நிலையில்,  இதுவரை 866 பேர் வீடு திரும்பியுள்ளார்கள். இதையடுத்து இன்று மட்டும் அதிகபட்சமாக சென்னையில் 52 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 452 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா நிலவரம் :

  1. வீட்டு கண்காணிப்பில் உள்ளவர்கள் : 25,503
  2. அரசு கண்காணிப்பில் இருப்பவர்கள் : 19
  3. 28 நாட்கள் முடிந்து வீடு திரும்பியவர்கள் : 87,159
  4. இன்று மட்டும் பரிசோதனை மாதிரிகள் : 6,426
  5. இதுவரை மொத்தம் பரிசோதனை மாதிரிகள் : 72,403
  6. தமிழகத்தில் இதுவரை மொத்தம் பாதிப்பு : 1,755
  7. கொரோனா வார்டில் சிகிச்சை பெறுபவர்கள் : 864
  8. கொரோனாவுக்கு உயிரிழப்பின் எண்ணிக்கை : 22
  9. இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை : 866


Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தயவு செஞ்சி வதந்திகளை பரப்பாதீங்க! காந்தாரா-2 படக்குழு வேதனை!

கர்நாடகா : காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் படபிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ‘காந்தாரா-2’…

17 minutes ago

எப்பவும் இந்த கேள்வியை கேட்காதீங்க! கூட்டணி பற்றி கேட்டதால் டென்ஷனான பிரேமலதா!

சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி…

38 minutes ago

பதற்றத்தின் உச்சியில் போர்…”ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்க கூடாது” ஜி7 நாடுகள் முடிவு!

கனடா :  கன்னாஸ்கிஸ் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில், இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பாக முக்கியமான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. ஈரான்…

59 minutes ago

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…

10 hours ago

”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!

டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…

10 hours ago

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…

12 hours ago