வழிப்பறி செய்த 2 போலீசாருக்கு ஒரு ஆண்டு சிறை – உயர்நீதிமன்றம் அதிரடி .!

Published by
murugan

மதுரை சார்ந்த  நகைக்கடை ஊழியர்கள் 2 பேர் கடந்த 2005-ம் ஆண்டு 4 லட்சம் ரூபாயுடன் சென்னைக்கு நகை வாங்க சென்றுள்ளனர். இதை தெரிந்து கொண்டு மதுரை உளவு பிரிவு தலைமை காவலர் மீனாட்சி சுந்தரம் , மதுரை திருமங்கலம் போலீஸ் நிலையம் தலைமை காவலர் பன்னீர்செல்வம் இருவரும் அந்த 2 பேரையும் பின் தொடர்ந்து சென்னை சென்றுள்ளனர்.

சென்னையில் உள்ள உயர்நீதிமன்றம்  அருகே இந்த நகை கடை ஊழியர்களை வழிமறித்து போலீஸ்காரர்கள் பணத்தை பறித்துள்ளனர். அவர்கள் சத்தம் போட்டதால் அப்போது ரோந்து பணியில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் அவர்கள் இருவரையும் வைத்து பிடித்தனர்.

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் 2 போலீஸ்காரர் உள்பட 8 பேர் இந்த வழி பறி சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சென்னை செசன்சு நீதிமன்றம்  குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி அனைவரையும் கடந்த 2008-ம் ஆண்டு விடுதலை செய்தது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி நிர்மல் குமார்  மீனாட்சி சுந்தரம் , பன்னீர்செல்வம் ஆகிய 2 காவலர்களையும்  நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று இந்த வழக்கில் போலீஸ்காரர்கள் இருவருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனையும் , 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Published by
murugan

Recent Posts

“அவுங்க வருத்தப்படணும்”..டிரம்ப், நெதன்யாகுவுக்கு பத்வா எச்சரிக்கை கொடுத்த ஈரான் மதகுரு!

“அவுங்க வருத்தப்படணும்”..டிரம்ப், நெதன்யாகுவுக்கு பத்வா எச்சரிக்கை கொடுத்த ஈரான் மதகுரு!

தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…

23 minutes ago

சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகள் – சேவையை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…

59 minutes ago

அன்புமணி சொல்வது ஏற்புடையதல்ல..ராமதாஸ் குறித்த விமர்சனத்திற்கு அருள் பதிலடி!

சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…

1 hour ago

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

14 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

14 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

14 hours ago