முடிவெட்ட சொன்னதால் +2 மாணவர் தற்கொலை… தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்.!

Published by
மணிகண்டன்

புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாதேஷ்வரன் எனும் மாணவன் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். மாதேஸ்வரன் , புதுக்கோட்டை மாவட்டம் விஜயபுரம் ஊரை சேர்ந்த கண்ணையா என்பவரின் மகனாவார்.

மாதேஸ்வரன் அதிகமாக மூடிவைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் அடிக்கடி மாதேஸ்வரனை முடிவெட்ட சொல்லி வந்துள்ளனர். ஆனால் மாதேஸ்வரன் முடிவெட்டாமல் இருந்துள்ளார். . நேற்று அதே போல முடிவெட்டாமல் மாதேஸ்வரன் பள்ளிக்கு சென்றுள்ளார்.

அப்போது பிற்பகல் தேர்வு இருந்துள்ளது. தேர்வு எழுத வேண்டும் என்றால் முடிவெட்டி விட்டு வரவேண்டும் என ஆசிரியர்கள் கூறியுள்ளனர். இதனால் காலை 11 மணியளவில் மாதேஸ்வரன் பள்ளியை விட்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து மாலை வெகு நேரம் ஆகியும் மாணவன் வீடு திரும்பாத காரணத்தால் பெற்றோர்கள் , உறவினர்கள், நண்பர்கள் மாணவனை தேடி அலைந்துள்ளனர். அப்போது பள்ளிக்கு பின்புறம் உள்ள பகுதியில் மாணவன் மாதேஸ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதனை அடுத்து மாணவன் மாதேஸ்வரன் தற்கொலை மரணத்திற்கு ஆசிரியர்கள் தான் காரணம். அதனால் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவரம் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கலைக்கப்பட்டது. மேலும் உயிரிழந்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று கல்வி அதிகாரிகள் மச்சுவாடி அரசு பள்ளிக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையை தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் சிவபிரகாசத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“திமுகவை மக்களே வீழ்த்துவார்கள்”…பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் அமித்ஷா பேச்சு!

மதுரை : மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கலந்து கொண்டார். கலந்து…

3 hours ago

ஜூன் 10-ல் இந்த 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை…

4 hours ago

விராட் கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு farewell நிகழ்ச்சி! ஆஸி கிரிக்கெட் வாரியம் திட்டம்!!

ஆஸ்திரேலியா :  கிரிக்கெட் வாரியம் (Cricket Australia) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட்…

4 hours ago

நாமக்கல் மக்களே…டேங்கர் லாரியில் இருந்தது சமையல் எண்ணெய் இல்லை! காவல்துறை விளக்கம்!

நாமக்கல் : இன்று (ஜூன் 8) 01.00 மணியளவில், தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நாமக்கல் வழியாக சோயா ஆயில் லோடு…

5 hours ago

கூட்டணி குறித்த கேள்வி! “சந்தோஷமான செய்தி விரைவில் வரும்” – ராமதாஸ் பதில்!

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் அரசியல் வட்டாரத்தில் இப்போதே கட்சிகளுடைய கூட்டணி குறித்த தகவல்கள் பரவ…

5 hours ago

டோனால்ட் டிரம்ப் உடன் மோதல்…புதிய கட்சி தொடங்கிய எலான் மஸ்க்!

வாஷிங்டன் :  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல்,…

7 hours ago