சென்னை உள்ள ராயப்பேட்டை பகுதியில் இன்று அதிகாலை அளவில் 20 வயது இளம்பெண் ஒருவர் ஆடையின்றி நிர்வாணமாக நடந்து செல்வதைப் பார்த்து அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக இதுகுறித்து பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அந்தப் பகுதிக்கு வந்த ராயப்பேட்டை போலீஸ் அதிகாரி தன் கையோடு கொண்டு வந்திருந்த துணியை எடுத்து அந்த பெண்ணுக்கு போர்த்தி விட்டார். பிறகு அந்த பெண்ணிடம் விசாரணை நடத்திய போது அந்தப் பெண்ணுக்கு தெலுங்கு தவிர வேறு எந்த மொழியும் தெரியவில்லை என்று காவல்துறை தரப்பில் கூறுகிறார்கள்.
இந்நிலையில், திடீரென அந்த பெண் வயிறு வலிக்கிறது என்று துடித்துள்ளார். அதனை கேட்ட போலீசார் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது அந்த பெண் சிகிச்சை பெற்று வருகிறார். இதனைத்தொடர்ந்து அந்தப் பெண் யார்? எதற்காக இதுபோன்று நிர்வாணமாக ரோட்டில் வந்தார்? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பின்னர் முதல் கட்ட விசாரணையின் போது அந்த பெண்ணுக்கு மன நலம் சரியில்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது. இருப்பினும் இதுகுறித்து சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…