தமிழக மீனவர்கள் 24 பேரை விடுதலை!

Published by
பாலா கலியமூர்த்தி

Fisherman : இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 24 பேர் விடுதலை.

கடந்த மார்ச் மாதம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மயிலாடுதுறை, புதுக்கோட்டை, காரைக்காலைச் சேர்ந்த 19 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பின்னர் மீனவர்களை விடுவிக்கக்கோரி தமிழக அரசு தரப்பில் இருந்து மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. இதன்பின், 19 மீனவர்களையும் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இன்று கொழும்புவில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் திரும்பினர்.

இந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 24 பேர் விடுதலை செய்யப்பட்டனர். தமிழ்நாடு மீனவர்கள் கைது தொடர்பான வழக்கை விசாரித்த இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. கடந்த 21ம் தேதி கைதான தமிழ்நாடு மீனவர்கள் 25 பேரில் ஒருவருக்கு மட்டும் 6 மாதம் சிறை தண்டனை விதித்துள்ளது இலங்கை நீதிமன்றம்.

எனவே, விடுதலை செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 24 பேரும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதனால், இவர்களும் விரைவில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இன்று 19 பேர் நாடு திரும்பிய நிலையில், மேலும் 24 பேர் திரும்ப உள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

2 days ago