[Image source : Twitter@@TNDIPRNEWS]
தமிழகத்தில் 27 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து முதன்மை செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார். சென்னை தலைமையிட ஐஜியாக ஆசியம்மாள் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார. அவர் முன்னதாக பொருளாதார குற்றப்பிரிவு டிஐஜியாக பொறுப்பில் இருந்தார்.
சென்னை மாநகர வடக்கு சட்ட ஒழுங்கு கூடுதல் ஆணையராக அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தென்மண்டல ஐஜியாக பொறுப்பில் இருந்தவர்.
மதுரை காவல் ஆணையராக லோகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை தலைமை கூடுதல் ஆணையராக பொறுப்பில் இருந்தவர்.
சென்னை போக்குவரத்து காவல் ஆணையராக சுதாகர் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கோவை ஐஜியாக பொறுப்பில் இருந்தவர்.
தென்மண்டல டிஐஜியாக நரேந்திரன் நாயர் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மதுரை காவல் ஆணையராக பொறுப்பில் இருந்தவர்.
திருச்சி மாநகர காவல் ஆணையராக காமினி நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு மண்டல ஐஜியாக புவனேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.
சிவில் சப்ளை சிஐடி பிரிவு டிஜிபியாக வன்னிய பெருமாள் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபியாக ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொருளாதார குற்றச்சடிப்பு பிரிவு ஏடிஜிபியாக பால நாகதேவி நியமிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறை தொழில்நுட்ப பிரிவு ஐஜி சந்தோஷ் குமார், கூடுதல் பொறுப்புகளாக லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி மற்றும் இணை இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
TANGETCO லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக பிரிஜ் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொருளாதார குற்றப்பிரிவு மாநில குற்ற ஆவண காப்பக கூடுதல் ஜிஜிபியாக அபின் தினேஷ் மொடக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பொருளாதார குற்றப்பிரிவை ஏடிஜிபியாக இருந்துள்ளார்.
மதுரை சரகடி ஐஜியாக ரம்யா பாரதி நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பதவியில் இருந்த பொன்னி காஞ்சிபுரம் சரக டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் சரக டிஐஜியாக பொறுப்பில் இருந்த பகலவன், திருச்சி சரக டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை சரக டிஐஜியாக சரவண சுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் திருச்சி சரக டிஜிபியாக பொறுப்பில் இருந்தவர்.
சிஐடி நுண்ணறிவு பிரிவு டிஐஜியாக ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நெல்லை மாநகர காவல் துறை ஆணையராக பொறுப்பில் இருந்தவர்.
சென்னை காவல் ஆணையராக தலைமையக ஐஜியாக கபில்குமார் சரத்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையாக இருந்தவர்.
இன்டெலிஜென்ஸ் சிஐடியாக ராஜேந்திரன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திருநெல்வேலி சரக டிஐஜியாக இருந்துள்ளார்.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…