2வது நாள் விசாரணை.. கட்சியின் அடிப்படை விதியை மாற்ற முடியாது – இபிஎஸ் தரப்பு வாதம்

Published by
பாலா கலியமூர்த்தி

கட்சியின் அடிப்படை கட்டமைப்பை  சிதைக்கும் வகையில் செயல்படுவதாக ஓபிஎஸ் குற்றச்சாட்டுவது தவறு என இபிஎஸ் தரப்பு வாதம்.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை இரண்டாவது நாளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சஹீன்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு முன் விசாரணை நடைபெறுகிறது.

அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் வாதாடி வருகிறார். அவர் கூறுகையில், அதிமுக பொதுச்செயலாளர், கட்சி அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்த்தேடுக்கப்பட வேண்டும் என்ற விதியை மாற்ற முடியாது. பொதுச்செயலாளர், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதியை எம்ஜிஆர் வகித்தார்.

எம்ஜிஆர் கட்சி துவங்கியபோது கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என கட்சி விதியை வகுத்தார். ஒருமுறை எழுதிவிட்டால் கட்சியின் அடிப்படை விதியை மாற்ற முடியாது. அரசியல் கட்சிகளுக்கு சித்தாந்தம் இருக்குமே தவிர ‘அடிப்படை கட்டமைப்பு’ என்ற ஒன்று கிடையாது. கட்சியின் அடிப்படை கட்டமைப்பை  சிதைக்கும் வகையில் செயல்படுவதாக ஓபிஎஸ் குற்றச்சாட்டுவது தவறு.

மேலும், பொதுக்குழு கூட்டத்தில் எடுத்த கட்சி விதி திருத்தங்களை தேர்தல் ஆணையம் இணையத்தில் வெளியிட்டுள்ளது. எனவே, கட்சி விதிகளை கட்சியில் இருக்கும் வரை ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும், இல்லாவிட்டால் கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என வாதம் முன்வைக்கப்பட்டு வருகின்றனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

11 hours ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

11 hours ago

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

11 hours ago

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

12 hours ago

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

12 hours ago

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

13 hours ago