2வது நாள் விசாரணை.. கட்சியின் அடிப்படை விதியை மாற்ற முடியாது – இபிஎஸ் தரப்பு வாதம்

Published by
பாலா கலியமூர்த்தி

கட்சியின் அடிப்படை கட்டமைப்பை  சிதைக்கும் வகையில் செயல்படுவதாக ஓபிஎஸ் குற்றச்சாட்டுவது தவறு என இபிஎஸ் தரப்பு வாதம்.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை இரண்டாவது நாளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சஹீன்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு முன் விசாரணை நடைபெறுகிறது.

அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் வாதாடி வருகிறார். அவர் கூறுகையில், அதிமுக பொதுச்செயலாளர், கட்சி அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்த்தேடுக்கப்பட வேண்டும் என்ற விதியை மாற்ற முடியாது. பொதுச்செயலாளர், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதியை எம்ஜிஆர் வகித்தார்.

எம்ஜிஆர் கட்சி துவங்கியபோது கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என கட்சி விதியை வகுத்தார். ஒருமுறை எழுதிவிட்டால் கட்சியின் அடிப்படை விதியை மாற்ற முடியாது. அரசியல் கட்சிகளுக்கு சித்தாந்தம் இருக்குமே தவிர ‘அடிப்படை கட்டமைப்பு’ என்ற ஒன்று கிடையாது. கட்சியின் அடிப்படை கட்டமைப்பை  சிதைக்கும் வகையில் செயல்படுவதாக ஓபிஎஸ் குற்றச்சாட்டுவது தவறு.

மேலும், பொதுக்குழு கூட்டத்தில் எடுத்த கட்சி விதி திருத்தங்களை தேர்தல் ஆணையம் இணையத்தில் வெளியிட்டுள்ளது. எனவே, கட்சி விதிகளை கட்சியில் இருக்கும் வரை ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும், இல்லாவிட்டால் கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என வாதம் முன்வைக்கப்பட்டு வருகின்றனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

11 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

11 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

12 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

12 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

13 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

15 hours ago