#ELECTIONBREAKING: 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் திருத்தம் – தினகரன் அறிவிப்பு..!

Published by
murugan

M.சந்தோஷ்குமார் அவர்களுக்கு பதிலாக அவரது மனைவி திருமதி.S.சங்கீதப்ரியா சந்தோஷ்குமார் ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) நிறுத்தப்படுகிறார் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

அமமுக சார்பில் இன்னும் முழுமையாக கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடையாத நிலையில், தற்போது அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியாகி வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான 15 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று வெளியிட்டார்.

இதைத்தொடர்ந்து, இன்று 50 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சியின் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். இன்று வெளியான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வரும் சட்டமன்ற தேர்தலில் கோவிப்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிமன்றக்குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 06 04. 2021 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் இரண்டாவது கட்ட அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) (203) சட்டப்பேரவைத் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த திரு M.சந்தோஷ்குமார் அவர்களுக்கு பதிலாக அவரது மனைவி திருமதி.S.சங்கீதப்ரியா சந்தோஷ்குமார் அவர்கள் (வத்திராயிருப்பு ஒன்றியக் கழக இணைச்செயலாளர் விருதுநகர் மேற்கு மாவட்டம்) தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Published by
murugan

Recent Posts

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

38 minutes ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…

1 hour ago

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…

2 hours ago

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

3 hours ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

4 hours ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

4 hours ago