Chengalpattu train [File Image]
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் மூன்று சிறுவர்கள் நடந்து சென்றுள்ளனர். அப்பொழுது அப்பகுதி வழியே வந்த மின்சார ரயில், அந்த மூன்று சிறுவர்கள் மீது மோதியுள்ளது.
இந்த மோதலில் சிறுவர்கள் தண்டவாளத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த மூன்று சிறுவர்களின் உடல்களை மீட்டு அடையாளம் கண்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதில் உயிரிழந்த 3 சிறுவர்களும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ், ரவி, மஞ்சுநாத் என்கிற மாற்றுத் திறனாளி சிறுவர்கள் எனக் கூறப்படுகிறது. தற்போது, இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், சென்னை, ஆவடி ரயில் நிலையத்தில் சிக்னல் கொடுத்தும் பிளாட்பார்மில் நிற்காமல் சென்ற மின்சார ரயிலின் 4 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டன. இதில் ரயில் பெட்டிகள் மற்றும் ரயில் மின் கம்பிகள் சேதமடைந்தன. மின்சார ரயில் தடம் புரண்ட காரணத்தால், சென்னையில் இருந்து திருவள்ளூர் செல்லும் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த மின்சார ரயில் தடம்புரண்ட விவகாரத்தில் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. தடம் புரண்ட ரயிலை இருப்பு பாதைக்கு மாற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த ரயில் தடம்புரண்டது குறித்து ரயில்வே துறையினர் குழு அமைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…