வேலை வாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க மூன்று மாதம் கால அவகாசம் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு.
2014, 15 மற்றும் 16-ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் சிறப்பு புதுப்பித்தல் சலுகை மூலம் மூன்று மாதம் கால அவகாசம் வழங்கப்படும் என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி கணேசன் தமிழக சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள், நலவாரிய ஓட்டுநர்கள், விபத்து மரணத்திற்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.1 லட்சம், ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அமைப்புசாரா ஓட்டுநர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இயற்கை மரண உதவித்தொகை ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
மேலும், கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தரப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை ரூ.2,400 ஆக உயர்த்தி வழங்கப்படும். தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர், தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் நல வாரியம் என்பதை தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியம் என பெயர் மாற்றம் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…