Tag: TN govt

”நெல் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!

சேலம் : சேலம் சென்றுள்ளமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக நீரை திறந்து வைத்தார்.முதல் கட்டமாக விநாடிக்கு 3,000 கனஅடி நீரை திறந்து வைத்த முதல்வர் மலர் தூவி வரவேற்றார். அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு பின்னர் படிப்படியாக விநாடிக்கு 12,000 கனஅடியாக உயர்த்தப்படவுள்ளது. டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை திறந்து வைத்த முதல்வர், சேலத்தில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார். பின்னர், அங்கு நடந்த அரசு விழாவில் பங்கேற்று […]

#DMK 4 Min Read
mk stalin - Nel Kolmuthal

மேட்டூர் அணை இன்று திறப்பு…, டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி.!

சேலம் : மேட்டூர் அணையில் இருந்து இன்று (ஜூன் 12) டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளது. முதல்வர் ஸ்டாலின் மேட்டூர் அணை பகுதிக்கு வந்து தண்ணீரை திறந்துவிட உள்ள நிலையில், முன்னதாக அணை பகுதியை சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி ஆய்வு செய்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, சேலம் மாவட்டத்திற்கு வருகை தரும் முதலமைச்சர் ஸ்டாலின், 11 கி.மீ. தொலைவிற்கு ரோடு ஷோ நடத்தி, […]

#Mettur Dam 4 Min Read
MKStalin showers flower petals

கீழடியின் தொன்மையை ஏற்க ஏன் தயக்கம்? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

சென்னை :  தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி கிராமத்தில், 2014-15 முதல் மத்திய தொல்லியல் துறையின் கீழ் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்த அகழாய்வுகள், வைகை நதிக்கரையில் அமைந்த கீழடி ஒரு தொன்மையான நகர்ப்புற நாகரிகமாக இருந்ததை உறுதிப்படுத்தின. இந்த ஆய்வுகளை இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனமும் தமிழ்நாடு மாநில தொல்லியல் துறையும் மேற்கொண்டன. 2023 ஜனவரியில், அமர்நாத் ராமகிருஷ்ணன் 982 பக்க ஆய்வறிக்கையை மத்திய தொல்லியல் துறைக்கு சமர்ப்பித்தார், ஆனால் அது இன்னும் வெளியிடப்படவில்லை. […]

Amarnath Ramakrishnan 7 Min Read
Thangam Thenarasu

கீழடி ஆய்வு முடிவுகளை அங்கீகரிக்காதது ஏன்? – மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் விளக்கம்.!

சென்னை : கீழடி, தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமாகும். இங்கு 2014-15 முதல் மத்திய தொல்லியல் துறையின் கீழ், அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில், முதல் இரண்டு கட்ட அகழாய்வுகள் நடைபெற்றன. இந்த ஆய்வுகள், வைகை நதிக்கரையில் அமைந்த கீழடி ஒரு தொன்மையான நகர்ப்புற நாகரிகமாக இருந்ததை உறுதிப்படுத்தின. இந்த ஆய்வுகள் இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனம் (ASI) மற்றும் தமிழ்நாடு மாநில தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டன. தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கடந்த […]

Amarnath Ramakrishnan 4 Min Read
Keezhadi - Gajendra Shekhawat

“நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு கிளாம்பாக்கமே சாட்சி”- எடப்பாடி பழனிசாமி கண்டனம்.!

சென்னை :  கடந்த சில தினங்களாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியது. இந்த நிலையில், திர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக தனது பதவில், ”கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திட்டமிடல் இன்றி திறந்து, மக்களை கஷ்டப்படுத்தியது இந்த திமுக அரசு. சரி, அதை முறையாக நிர்வாகம் செய்து பேருந்து வசதிகளை உறுதி […]

#ADMK 4 Min Read
kilambakkam - edappadi

”கொரோனா வந்தால் சமாளிக்கத் தயார்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!

சென்னை : நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாயுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,755ஆக அதிகரித்துள்ளது. ஜூன் 6-ம் தேதி மட்டும் இந்தியாவில் கொரோனாவல் 4 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் 194 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 27 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா வேகமாக பரவி வருவதையடுத்து, பொது சுகாதாரத்துறை சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய வேண்டும், அதிக காய்ச்சல், இருமல், உடல் வலி […]

Corona virus.Corona 4 Min Read
Masubramanian

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழப்பு.!

விழுப்புரம் : கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த சூழலில் கொரோனா தொற்று பாதிப்பால் விழுப்புரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பெரப்பேரி கிராமத்தை சேர்ந்த தியாகராஜன் என்பவர், ஹைதராபாத்தில் கட்டுமான ஒப்பந்ததாரராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது கொரோனா தொற்று உறுதியான நிலையில், சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்த நிலையில், அவர் விழுப்புரம் அரசு […]

#Corona 3 Min Read
Corona Virus TN

கொரோனா பரவல்: ”கர்ப்பிணிகள் மாஸ்க் அணிய வேண்டும்” – பொது சுகாதாரத்துறை.!

சென்னை : சிங்கப்பூர், ஹாங்காங்கில் பரவி வந்த கொரோனா தற்போது இந்தியாவிலும் வேகமெடுக்கிறது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 498 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கொரோனா பாதித்த 5364 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் இந்தியாவில் கொரோனா தொற்றால் 4 பேர் உயிரிழந்தனர், இதனால் பலி எண்ணிக்கை 51 ஆனது.  தமிழ்நாட்டில் நேற்று ஒரு நாளில் மட்டும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு, 221 பேர் மருத்துவமனையில் […]

#Corona 3 Min Read
corona Mask - Pregnant women

‘தக் லைஃப்’ சிறப்பு காட்சிக்கு அனுமதி.! தமிழக அரசு கூறியது என்ன?

சென்னை : இயக்குநர் மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் நாளை வெளியாகிறது. இத்திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, காலை 9 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 2 மணி வரை மொத்தம் 5 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாளை ஒரு நாள் மட்டும் இந்த சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசின் இந்த அனுமதி அறிவிப்பு, ரசிகர்களுக்கு படத்தை வெளியீட்டு நாளில் […]

kamal 4 Min Read
thug life

உதயநிதி ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு – தமிழக அரசு.!

சென்னை : துணை முதல்வர் உதயநிதிக்கு காய்ச்சல் மற்றும் தொடர் இருமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர், சில நாள்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இதன் காரணமாக, அவர் கலந்துகொள்ள இருந்த அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நலம் விரைவில் தேறுவதற்கு தமிழக மக்கள் மற்றும் திமுக தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

#Chennai 2 Min Read
udhay stalin

டெல்லியில் தமிழர்கள் வசித்த மதராஸி முகாம் இடிப்பு.., தமிழ்நாடு அரசு உதவி அறிவிப்பு.!

சென்னை : டெல்லியில் 4 தலைமுறைகளாக தமிழர்கள் வசித்து வந்த மதராஸி முகாம் இடிக்கப்பட்டு வருகிறது. நீண்ட காலமாக தமிழர்கள் வசித்து வரும் அந்த குடியிருப்புகளை இடித்து மக்களை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஒக்கலா, கௌதம் புரி, இந்திரபுரி, ஜல் விஹார், ஜங்புரா உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் இடத்தை அரசு அகற்றுவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்னர். தற்பொழுது, கால்வாயை ஒட்டியுள்ள குடிசை பகுதிகளை அகற்றும் பணியில் ஒரு பகுதியாக […]

#Delhi 5 Min Read
tn govt - Delhi

பிரமாண்ட ரோட் ஷோ…முதலமைச்சருக்கு மதுரை மக்கள் உற்சாக வரவேற்பு!

மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறது. அந்த வகையில் திமுக தெற்கில் இருந்து தொடங்கும் வகையில் நாளை மதுரை மாவட்டத்தில் பிரமாண்டமாக பொதுக்குழு ஒன்றை நடத்துகிறது. எனவே, நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு முன்பு  இன்று மதுரை வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை நடைபெறும் பிரம்மாண்ட ரோடு ஷோவில் பங்கேற்கிறார் எனவும்,  மதுரை பெருங்குடி […]

#DMK 4 Min Read
MK Stalin

முதல்வர் வருகை: ‘மதுரையில் கால்வாய் துணியால் மறைப்பு’ – ஆட்சியர் விளக்கம்.!

மதுரை : நாளை (ஜூன் 1) மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த நிலையில், இன்று மதுரை வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை நடைபெறும் பிரம்மாண்ட ரோடு ஷோவில் பங்கேற்கிறார். மதுரை பெருங்குடி முதல் ஆரப்பாளையம் வரை சுமார் 17 கி.மீ. தொலைவுக்கு ரோடு ஷோ நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், பந்தல்குடி சாலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தரும் நிலையில், சாலையில் உள்ள சாக்கடை கழிவுகள் கலக்கும் […]

#DMK 3 Min Read
Madurai -DMK

தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் அரசு பணிகளில் இருந்து 8,144 பேர் ஓய்வு.!

சென்னை : தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் (மே 31, 2025) சுமார் 8 ஆயிரத்து 144 பேர் அரசுப் பணிகளில் இருந்து ஒய்வு பெற்றுள்ளனர். குரூப் ஏ பணியிடங்களில் 424 பேரும், குரூப் பி பணியிடங்களில் 4,399 பேரும், குரூப் சி-ல் 2,185 பேரும், குரூப் டி-ல் 1,136 பேரும் ஓய்வு பெறுகிறார்கள். இதில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மற்றும் பிற துறை ஊழியர்கள் அடங்குவர். குறிப்பாக, கல்வி, சுகாதாரம், காவல், மற்றும் நிர்வாகத் துறைகளில் […]

govt employees 3 Min Read
Tamil Nadu Government Job

நாளை திமுக பொதுக்குழுக் கூட்டம்.! இன்று மாலை பிரமாண்ட ரோடு ஷோ நடத்தும் மு.க.ஸ்டாலின்.!

மதுரை : ஜூன் 1-ஆம் நாள் மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. கடந்த மே3 ம் தேதி நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், நாளை 4 ஆண்டுகால திமுக ஆட்சியின் திட்டங்கள் குறித்து 1,244 இடங்களில் கூட்டம் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாளை மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டம்  நடைபெறவுள்ள நிலையில், இன்று மதுரை செல்லும் முதல்வர்  மு.க.ஸ்டாலின் இன்று மாலை நடைபெறும் ரோடு ஷோவில் பங்கேற்கிறார். மதுரை பெருங்குடி முதல் […]

#DMK 4 Min Read
DMK general committee meeting

4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!

சென்னை : கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் உயர்கல்வி பெறும் வகையில் 2025-26ம் கல்வி ஆண்டில் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கே.வி.குப்பம் (வேலூர்), துறையூர் (திருச்சி), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), செங்கம் (திருவண்ணாமலை) ஆகிய இடங்களில் கல்லூரிகள் தொடங்க உள்ளன.  இதன் மூலம் 1,120 மாணவர்கள் உயர்கல்வி பெறுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில், ”புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற முன்னோடித் திட்டங்களால் தமிழ்நாட்டில் […]

#DMK 5 Min Read
mk stalin

தமிழ்நாடு அரசின் சேவைகள் எளிதாக சென்றடைய புதிய திட்டம் இன்று அறிமுகம்.!

சென்னை : அரசு சேவைகளை எளிதாக்கும் ‘எளிமை ஆளுமை’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டம், மாநில முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கப்பட்டு, அரசு சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் பொதுமக்களின் அணுகலை மேம்படுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம் அரசு சேவைகளை எளிதாக்குவதற்கும், பொதுமக்களுக்கு விரைவாகவும் வெளிப்படையாகவும் சேவைகளை வழங்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டம்  மக்கள்-தொழில் நிறுவனங்களை மையப்படுத்தி சேவைகளை துரிதப்படுத்த ஏதுவாக அறிமுகம் செய்யப்படுகிறது. இத்திட்டம் […]

Dy CM Udhay 3 Min Read
CM MK STALIN

”சென்னைக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையம்” – தமிழ்நாடு அரசு உத்தரவு.!

சென்னை : சென்னை மாநகராட்சிக்கென தனி பேரிடர் மேலாண்மை ஆணையத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பேரிடர் காலங்களில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைந்து பேரிடர்களை எதிர்கொள்ள புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையர் தலைமையிலான  இந்த பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் சென்னை ஆட்சியர், காவல் ஆணையர், துணை ஆணையர், நல அலுவலர், சி.எம்.டி.ஏ. தலைமை செயல் அதிகாரி, நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் உள்ளிட்டோர் ஆணையத்தில் இருப்பர். இந்த முடிவு, பெருநகரங்களில் பேரிடர்களின் தாக்கம் அதிகரித்து வருவதை எதிர்கொள்ளும் […]

#Chennai 4 Min Read
Chennai Corporation - TN Govt

அனகாபுத்தூர் ஆற்றங்கரையோர மக்களுக்கு மாற்று வீடு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!

சென்னை : உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் சென்னையை அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், அடையாறு நதியை சீரமைக்க அனகாபுத்தூர் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் அவசியம். அடையாறு கரையோர குடியிருப்புகளை அகற்றி அதன் மூலம் மாசுபடுவதை தடுப்பது அவசியம். கழிவுநீர் கலப்பை தடுக்க ஆற்றங்கரையோர வீடுகள் மறுகுடியமர்வு செய்வது அவசியம் என அரசு விளக்கம் கொடுத்துள்ளது. மேலும், அனகாபுத்தூர் அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள காயிதே மில்லத் நகர். மூகாம்பிகை நகர். சாந்தி நகர், எம்ஜிஆர் […]

#Chennai 4 Min Read
Anakaputhur - TN Govt

‘வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித கட்டண உயர்வும் இல்லை’ – அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு .!

சென்னை : மின் கட்டணத்தை 3% உயர்த்த மின் வாரியத்திற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது என தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து, தமிழக அரசு வரும் ஜூலை மாதம் முதல் 3% வரை மின் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக ராமதாஸ், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர். ஏற்கெனவே, 2024 ஜூலையில் 4.8%, 2023 ஜூலையில் 2.18% கட்டணம் உயர்ந்த நிலையில் தற்போது ஜூலை மாதம் மீண்டும் உயர்த்த முடிவு என தகவல் பரவியது. மேலும், ஆணையத்தின் […]

#TNEB 4 Min Read
Minister Sivashankar