சென்னை பெருநகரக் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆகஸ்டு 15 நள்ளிரவு 12 மணி முதல் ஆகஸ்டு 17 காலை 6 மணி வரை எந்தவிதத் தளர்வுமின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது.
தமிழகத்தை பொறுத்தளவில், சென்னையில் தான் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதன்காரணமாக, சென்னையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை காலை 6 மணிவரை 30 மணிநேர முழு ஊரடங்கை போக்குவரத்துக்கு காவல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், சென்னை பெருநகரக் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆகஸ்டு 15 நள்ளிரவு 12 மணி முதல் ஆகஸ்டு 17 காலை 6 மணி வரை எந்தவிதத் தளர்வுமின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 16) பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர வேறு எந்தொரு வாகனங்களுக்கு அனுமதி கிடையாது என சென்னை போக்குவரத்துக்கு காவல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, அத்தியாவசியமாக வீட்டை விட்டு வெளியே வருவதையும், தெருக்களில் சமூக இடைவெளியின்றி கூட்டமாகக் கூடி நிற்பதையும் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அவசர மருத்துவத் தேவைகளுக்கு மட்டுமே தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படுகிறது.
இந்த தடைகளை மீறி வெளியே வரும் வாகனங்களுக்கு, பிரிவு 144ன் கீழ், வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும், இதற்காக நகரம் முழுவதும் 193 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், இது தொடர்பாக சந்தேகங்கள் இருப்பின் போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறை எண்கள் 044-23452330/ 044-23452362 அல்லது 90031 30103 எனும் எண்களைத் தொடர்பு கொண்டு விளக்கம் பெற்றுக்கொள்ளலாம் என சென்னை போக்குவரத்துக்கு காவல் ஆணையம் தெரிவித்துள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…