ஆவின் நிறுவனத்தில் முறைகேடு காரணமாக அந்நிறுவன 34 தலைமை அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆட்சியில் ஆவின் நிறுவனத்தில் ஏராளமான முறைகேடு நடந்துள்ளதாக ஏற்பட்ட புகார் எழுந்தது.மேலும்,முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் உயர்பதவியில் அமர்த்தப்பட்டு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தற்போதைய பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்களிடம் பால் முகவர்கள் புகார் அளித்தனர்.
இதனால்,ராஜேந்திர பாலாஜி மீதான முறைகேடுகள் குறித்து விசாரணை அறிக்கை தயார் ஆகி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,ஆவினில் முறைகேடு காரணமாக அந்நிறுவனத்தின் 34 தலைமை அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி,
மேலும்,இதுகுறித்து அமைச்சர் நாசர் அவர்கள் கூறுகையில்:”முதல்வர் ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் நிர்வாகம் திறம்பட செயல்பட வேண்டியதன் காரணமாக ஆவின் உற்பத்தியைக் கூட்டவும்,அதே நேரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மக்களை சென்றடைய வேண்டிய உணர்வின் அடிப்படையில் அதிகாரிகள் இடம் மாற்றப்பட்டுள்ளனர்.
கடந்த ஆட்சியை விட தற்போதைய ஆட்சியில் 1.30 லட்சம் அளவிற்கு உற்பத்தியை அதிகரித்துள்ளோம்.அந்த வகையில்,அதிகாரிகளின் இடமாற்றத்தின் மூலம் உற்பத்தியை மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.நிர்வாக வசதிக்காக அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்”,என்று தெரிவித்தார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…